March 17, 2010 Time 2.16 am

Raj Suthan,

I am not supporting individuals, including Sampanthar. I am supporting TNA founded by the late Dharmaratnam Sivaram with the help of Thalaivar. Sampanthar is not averse to youths. In fact he was grooming Gajendrakumar to the chagrin of late N.Raviraj.

Sampanthan is in politics from 1961 Sathiyagraga. He entered parliament in 1977. I know him as far back as 1957-1959 when I was attached to Trincomalee Kachcheri and between  1977  and up to 1980   when I left Ceylon to take up an appointment with the Bauchi state in Nigeria as principle auditor. Thereafter,  I met Sampanthan when he came to Canada in 2004.

I cannot let go Gajendrakumar and Gajendran (both political novices and first time parliamentarians) to publicly demand that Sampanthar should be defeated in Trincomalee. This is a self-destructive rhetoric that will irreparably damage unity forged between east and north by Thanthai Chelvanayakam and Thalaivar. Thalaivar would have become the Chief Minister not once at least twice when he was offered that post by Jayewardene in1987 and Chandrika in 1996 on condition he give up the east! I know the real people who are manipulating Gajendrakumar behind the scenes. He decided not to seek re-nomination and quit politics, but I am happy that he changed his mind.

I saw  recently a photograph that shows Sampanthan seated next to Thalaivar when he met TNA MPs. Thalaivar had reposed full confidence in
him. If this is not the case  he would have  preferred someone else (?)  as the leader of the TNA parliamentary group. He has associated with all the negotiations that took place in the late eighties with the Indian government. He is the best Thamil  parliamentarian we have now.

The mudslinging against him is due to two persons (Gajendran and Pathmini) who first decided to quit politics, but  later changed their minds due to pressure brought on them by the  Diaspora Thamils  urging  them to contest. (Interview by Pathmini to CTR).

Re-nomination  was denied to Imam and Cyril in Jaffna and Thurairatnasingham in Trincomalee.

Who should be nominated or denied nomination is a matter for the TNA leadership. That is my view. Diaspora Thamils cannot decide. In Jaffna only Premachandran and Senathirajah are old faces. The balance 10 candidates are new.

Dr.Jeyakularajah who was close to Thalaivar as his personal physician has been nominated to contest in Vanni. Col.Teepan's sister's husband has been given nomination in Jaffna. Ariyenthiran a nominee of LTTE has be renominated in Batticaloa. So the Goebellsian  propaganda Sampathan axed pro-LTTE MPs is simply not true. 

As I said at the beginning I am not concerned about individuals. I would have taken exactly the same position if the role is reversed between Gajendrakumar and Sampanthar.

Thamilvaddam is not the platform to canvass views, especially those couched in abusive language replete with vituperative innuendoes,  diametrically opposed to the Moderator. Such people must look for space elsewhere. However, any reasonable and constructive criticism in good faith  is  always welcome. 
 

Nakkeeran

 


 

மார்ச்சு 17, நேரம் காலை 12.03 மணி

பேராசிரியர் ரஞ்சன் அவர்கட்கு!

வணக்கம். கனடிய தமிழர் பேரவை சார்பாக தாங்கள் வண.இமானுவேல் அடிகளார் அவர்களுக்கு எழுதிய தன்னிலை விளக்கக் கடிதத்தத்தை ஆங்கிலத்திலும் தமிழிலும் படித்தேன்.

முதலில் இந்த இரவு விருந்தை நடத்தியது தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் மட்டுமே. தமிழீழச் சங்கம் அல்ல. மேலும் குணநாதன் தமிழீழச் சங்கத்தின் தலைவரும்  அல்ல. அவர் தமிழர் புனர்வாழ்வுக் கழகத் தலைவர்.  அன்றைய இரவு விருந்தில் த.பு.கழகத்தின் தலைவராக அல்லாமல் தனிப்பட்ட முறையிலேயே - எனக்கும் அவருக்கும் இடையில் இருக்கும் அரைநூற்றாண்டு கால நட்புக் காரணமாக - அவரும் அவரது துணைவியாரும்  கலந்து கொண்டார்கள்.

இது ஒரு புறம் இருக்க இந்தத் தேர்தலில் "கனடியத் தமிழர் பேரவை எந்தவொரு கட்சியினது அறிக்கைக்கும் கொள்கை விளக்கமளிக்க மாட்டது. இதற்கு மாறாக எமது அமைப்பின் பெயரால் வெளியாகிய எந்தச்செய்திகளுக்கும் கனடியத் தமிழர் பேரவைக்கும் எந்த விதமான சம்பந்தமுமில்லையென இத்தால் அறியத்தருகிறோம்" என எழுதியுள்ளீர்கள். நான் நினைக்கிறேன் நீங்கள் க.த.பேரவையின் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை SindhToday     மற்றும் IANS என்ற செய்தி நிறுவனத்துக்கு கொடுத்த நேர்காணலையே  குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன்.  அதில் அவர் "The TNA has not abandoned its four co-principles which include a separate homeland for Tamils,’ Canadian Tamil Congress leader David Poopalapillai told IANS here.  Poopalapillai said, “The 1.3 million-strong Sri Lankan Tamil diaspora is behind the TNA and it has full faith in its leadership. We are very firm on what we want’'  எனச் சொல்லியுள்ளார்.

இந்தச் செவ்வியில்  எந்தத் தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நான்கு  அடிப்படையான விடயங்களை முன்வைத்துள்ளதாகவும், தனியான தமிழர்களுக்கான தாயகம் தனித்துவமான தேசிய இனம்  சுயநிர்ணய உரிமை மற்றும் இலங்கைத்தீவில் வாழும் அனைவருக்குமான குடியுரிமை என்பவையே அவையென்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.  உண்மையில் குடியுரிமைச் சிக்கல் இப்போது தீர்க்கப்பட்டுவிட்டது. சென்ற ஆண்டு எஞ்சியுள்ள 150,000 மலையகத் தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்கும் சட்டம்  சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மற்றது ததேகூட்டமைப்பு  தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை ஆகியவற்றை மட்டுமல்ல  இறைமையும் சேர்த்து அந்த நான்கையும்  கைவிடவில்லை என அறிக்கை விட்டுள்ளது.

உலகத் தமிழர் பேரவை சார்பாக மார்ச்சு 15, 2010 தேதியிட்டு வண. இமானுவேல் அவர்கள் விடுத்த அறிக்கை பக்க சார்பாக உள்ளதாகவே நான் நினைக்கிறேன். உலகத் தமிழர் பேரவை தனது நிலைப்பாட்டை நேரடியாகச் சொல்லத் துணிவில்லாமல் மறைமுகமாகத் தனது நிலைப்பாட்டைச் சொல்லியுள்ளது. சான்றாக "ஆகையால் தம்வாக்குகளை இட்டு நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யும் போது தமிழரது விடுதலைக் குறிக்கோளுக்கு இரண்டகம் இழைக்கக்கூடிய பொய்யான அரசியல் தலைவர்களுக்கோ கட்சிகளுக்கோ ஆதரவு வழங்காது சிறீலங்காவிலும் வெளியேயும் வாழும் ஒட்டுமொத்தத் தமிழரது அடிப்படை வேட்கைகளில் பற்றுறுதியுடையோருக்கு ஆதரவு வழங்குமாறு நாம் பரிந்துரைத்து வலியுறுத்துகின்றோம்.

எமக்கு உள்ளார்ந்தமாக உள்ள தன்னாட்சி உரிமை, தமிழரது அடிப்படை வேட்கைகள், தமிழரது தேசியம், தாயகம், தன்னாட்சியுரிமை ஆகிய கோட்பாடுகளுக்குத் துணிவுடன் நிலைத்தியங்கக்கூடிய அரசியல் தலைவர்களையும் கட்சிகளையும் உலகத் தமிழர் பேரவையானது புலம்பெயர்ந்த தமிழரிடையுள்ள பல்வேறு வளங்களையும் திரட்டி ஆதரித்து அவர்களோடு சேர்ந்து பணியாற்றும்.

உலகத் தமிழர் பேரவை பற்றிய கூடுதல் தகவல்களைக் கீழே தரப்பட்டுள்ள எமது இணையத் தளத்திலிருந்து அறிந்து கொள்ளுமாறு வேண்டுகின்றேன்."  இதில்  "இரண்டகம் இழைக்கக்கூடிய பொய்யான அரசியல் தலைவர்களுக்கோ கட்சிகளுக்கோ ஆதரவு வழங்காது சிறீலங்காவிலும் வெளியேயும் வாழும் ஒட்டுமொத்தத் தமிழரது அடிப்படை வேட்கைகளில் பற்றுறுதியுடையோருக்கு ஆதரவு வழங்குமாறு நாம் பரிந்துரைத்து வலியுறுத்துகின்றோம்  என்பது  யாரைக் குறிக்கிறது? சம்பந்தர் தலைமையிலுள்ள ததேகூட்டமைப்பைத்தானே குறிக்கிறது?  அவருக்கோ அல்லது ததேகூட்டமைப்புக்கோ   "பற்றுறுதி" .இல்லை அந்தப் பற்றுறுதி கஜேந்திரகுமாரின் தமிழ்க் காங்கிரசுக்கு  அல்லது இப்போது அவர் அணிந்திருக்கும் முகமூடி தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியைத்தானே குறிக்கிறது?  மேலும் அந்த முன்னணியின் தலையாய முழக்கமான " யாழ்ப்பாணத்தில் பிரேமச்சந்திரனையும் மாவை சேனாதிராசாவையும் தோற்கடிக வேண்டும் திருமலையில் சம்பந்தனைத் தோற்கடிக் வேண்டும்" என்பதையும் உலகத்ததமமிழர் பேரவை ஏற்றுக் கொண்டதாகத்தானே கொள்ள வேண்டும்? இந்த அறிக்கைக்கு வேறு பொருள் இருக்கிறதா?

யாழ்ப்பாணத்தில் சேனாதிராசா மற்றும் பிரேமச்சந்திரன் இருவரையும் தோற்கடித்தால் தமிழர் பிரதிநித்துவம் குறையாது. ஆனால் திருமலையில் அப்படியல்ல. சம்பந்தன் தோற்கடிக்கப் பட்டால் தமிழர் பிரதிநித்துவம் குறைந்து விடும் என்பதையாவது வண. இமானுவேல் அடிகளாகட்டும் உலகத் தமிழர் பேரவையாகட்டும் புரிந்து கொள்ளவில்லையா?

அதாவது சிங்களவன் வென்றாலும் பருவாயில்லை சம்பந்தர் தோற்க வேண்டும்! வேடிக்கை என்னவென்றால் பசில் இராசபக்சேயின் இலக்கும் சம்பந்தரைத் தோற்கடிக்க வேண்டும் என்பதுதான்! திருமலை தேர்தல் மாவட்டத்தில் இம்முறை அங்கு 14 கட்சிகளும் 17 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. மற்ற மாவட்டங்களிலும் இதே கதைதான். தமிழர்களது வாக்கைப் பிரித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பலத்தைக் குறைக்க வேண்டும் என்பது மகிந்தாவின் திட்டம். அதற்கு உலகத் தமிழர் பேரவை ஆமாம் போடுகிறதா? இதைவிட இரண்டகம் உலகத்தில் வேறு உண்டா?

கஜேந்திரகுமார், கஜேந்திரன், பத்மினி ஆகியோர் பற்றுறுதி வாய்ந்த 22 கரட் தங்கம் சம்பந்தர் வெறும் பித்தளை என்றுதானே இமானுவேல் அடிகளார் சொல்கிறார்? அல்லது சொல்ல வைக்கப்பட்டுள்ளார்?

இந்த நிலைப்பாட்டை எப்படி நீங்கள் அனுமதித்தீர்கள்?  அதனை அனுமதித்துவிட்டு இப்போது கனடிய தமிழர் பேரவை சார்பாக எதற்காக டேவிட் பூபாலபிள்ளையின் செவ்வியை மறுத்து அறிக்கை விடுகிறீர்கள்?  சரி டேவிட் பூபாலபிள்ளையின் கருத்தோடு மாறுபட்டு அறிக்கை விட்டீர்கள் கனடிய தமிழர் ேரவையின் நிலைப்பாடு என்ன என்று நீங்கள் சொல்லவில்லையே?  உலகத் தமிழர் பேரவையின் காங்கிரஸ் சார்பான நிலைப்பாடுதான் கனடிய தமிழர் பேரவையின் நிலைப்பாடா? அப்படியென்றால் அதனை வெளிப்படையாகச் சொல்வீர்களா?

தமிழாகளுக்கு இன்று இருக்கிற ஓரே அரசியல் பலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. அதனைச் சிதறடித்து தமிழர்களது ஒற்றுமையை சின்னாபின்னமாக்குவதுதான் உங்கள் குறிக்கோள் என்றால் தாராளமாகச் செய்யுங்கள். அதனை எதிர்கொள்ள தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் அணியமாக இருக்கிறது.   மயிரைக் கட்டி மலையை இழுத்தால் மலை வரும்.  வராது போனால் மயிர் போய்விட்டது என்று நினைத்துவிட்டுப்  போவேன். 

இப்போதும் காலம கடந்து விடவில்லை. மதில் மேல் பூனை போல் இருக்காமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்து அறிக்கை விடுங்கள்.  இந்தத் தேர்தலில் வென்று வருகின்ற கட்சியோடுதான் இனச் சிக்கல் தொடர்பாகப் பேசுவேன் என மகிந்த இராசபக்சே கூறியிருக்கிறார்.  இந்தியா உட்பட மேற்குலக நாடுகளின் நிலைப்பாடும் அதுவாகத்தான் இருக்கிறது.  அதனை மறக்க வேண்டாம். வரலாற்றுப் பிழையை இழைக்க வேண்டாம்.

இப்படித்தான் ஆட்சித்தலைவர் தேர்தலைப் புறக்கணிக்கச் சொல்லி உலகத் தமிழர் பேரவை  மூக்கை உடைத்துக் கொண்டது. அல்லது முகத்தில் கரி பூசிக் கொண்டது நினைவிருக்கலாம்.

நீதிக்கும் அநீதிக்கும், விடுதலைக்கும் - அடிமைத்தனத்துக்கும்,  பொய்மைக்கும் வாய்மைக்கும் இடையில் நடுநிலை என்பது இல்லை என்பதையும் நினைவூடட விரும்புகிறேன்.

நாங்கள் எங்கள் மண்ணும் மக்களும் விடுதலை பெறத் தொடர்ந்து வேறு வழிகளில் போராடுவோம்.  அதற்காகப் பயன்படக் கூடிய இராதந்திரத்தைப் பயன்படுத்தித்  தொடர்ந்து பயணிப்போம். நன்றி.

மிக்க அன்புடன்

 

நக்கீரன்


 

 

தமிழர்களின் தேசம் சிங்களவர்களின் தேசம், இதுவே கூட்டமைப்பின் நிலைப்பாடு: கனேடிய தமிழ் காங்கிரஸ்

[ திங்கட்கிழமை, 15 மார்ச் 2010, 04:42.33 PM GMT +05:30 ]

தமிழர்ளின் தேசம் சிங்களவர்களின் தேசம் என இரண்டு தனியான தேசங்களை கொண்ட ஒரு நாடு என்ற அடிப்படையில்தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்திவருவதாக கனேடிய தமிழ் காங்கிரஸ் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்போடு தொடர்ந்தும் தொடர்பில் இருப்பதாக குறிப்பிட்ட அவர் ஊடகங்கள் தவறாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டை அர்த்தப்படுத்தியுள்ளன என குறிப்பிட்டார்.

நான்கு அடிப்படையான விடயங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்துள்ளதாகவும், தனியான தமிழர்களுக்கான தாயகம் தனித்துவமான தேசிய இனம்  சுயநிர்ணய உரிமை மற்றும் மற்றும் இலங்கைத்தீவில் வாழும் அனைவருக்குமான குடியுரிமை என்பவையே அவையென்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

தமிழர்களுக்கான தீர்வானது அமெரிக்காவுக்கும் பியூட்டே றைசோ (Puerto Rico) க்கும் இடையில் உள்ளது போன்றதாக, அதாவது ஒரு பாஸ்போட் ஆனால் இரண்டு தேசங்கள் இருக்கும். ஒரு நாடாகவும், இரண்டு தேசங்களாகவும் அது இருக்கும் எனவும் விளக்கமளித்தார்.

மலையகத்தில் குடியுரிமையின்றி உள்ள தமிழ் மக்களும் தமிழர்களின் தேசத்தில் குடியுரிமையை பெறுவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 


Tamils have not given up demand for separate homeland’

March 13th, 2010 SindhToday

 

 

Toronto, March 14 (IANS) Reacting sharply to reports from Colombo that the Tamil National Alliance (TNA) has given up its demand for a separatist demand, the Canadian Tamil Congress here said Saturday that the Tamils have not given up their demand for a separate homeland.

“The TNA has been misquoted. They are in constant touch with us and what the media has put out is absolutely wrong. The TNA has not abandoned its four co-principles which include a separate homeland for Tamils,’ Canadian Tamil Congress leader David Poopalapillai told IANS here.

Outlining the TNA’s “four co-principles”, the Tamil diaspora leader said, “These include a separate homeland for Tamils in Sri Lanka, their right to self-determination, preservation of distinct Tamil identity and citizenship rights for Tamils who came to Sri Lanka from India in the 18th century.’

Poopalapillai said, “The 1.3 million-strong Sri Lankan Tamil diaspora is behind the TNA and it has full faith in its leadership. We are very firm on what we want.’

The Tamil leader added, “What we are fighting for is something like Puerto Rico and the US – two nations with one passport. The island of Sri Lanka will be one country with two nations – one Tamil nation and one Sinhalese nation.’

He said nearly half of Tamils of Indian origin who were settled in central parts of Sri Lanka in the 18th century but still have no citizenship will be accommodated in the new nation.

Reports from Colombo said Friday that the ethnic Tamil party has given up its demand for an independent state and is ready to accept regional self-rule under a federal set-up.

The TNA, which backed the Tamil Tigers since its formation in 2001, reportedly released its so-called platform to accept a federal set-up. The party has 22 members in the nation’s 225-member parliament. It supported former army chief Sarath Fonseka during the January presidential election.

(Gurmukh Singh can be contacted at gurmukh.s@ians.in)

 



 

Dear Father Emmanuel,

RE: Clarifying official position of the Canadian Tamil Congress

Thank you for your letter requesting clarification of the CTC’s position regarding the general election in Sri Lanka. As you are aware, press statements often get twisted out of context. I am providing below the official position of the CTC both in English and Tamil so there is no room for misinterpretation:

"The Canadian Tamil Congress feels that the people of Tamil Eelam have still not recovered from the War and are in no mood for another election. Never the less, the CTC will stay neutral and let the people on the ground choose whichever party represents their long-term interest which is based on the three core principles of nationhood, homeland, and their inherent right to self-determination. It is the responsibility of the political parties on the ground to articulate their positions unambiguously. The CTC will not interpret this on any party's behalf. The CTC categorically dissociates itself from any press reports on the contrary."


"ஒரு கொடிய யுத்ததிலிருந்து முற்றாக மீளாத நிலையில், தமிழீழத்திலுள்ள மக்கள் ஒரு தேர்தலை எதிர்கொள்ளும் மனோநிலையில் இல்லையென்று கனடியத் தமிழர் பேரவை உணர்கின்றது. எனினும், கனடியத் தமிழர் பேரவை கட்சிசார்பற்ற நடுநிலையை கடைப்பிடிக்கும் அதேவேளையில், தமிழீழமக்களின் நீண்டகால வேட்கைகளான தாயகம், தேசியம், தம்மியல்பாகவே உரித்தான தன்னாட்சியுரிமை ஆகிய மூன்று அடிப்படைக் கோட்பாடுகளை உண்மையாகப் பிரதிபலிக்கும் கட்சிக்கு அங்குள்ள மக்கள் சுயமாக வாக்களிப்பார்களென கருதுகின்றது. தமிழீழமக்களின் அடிப்படைக்கோட்பாடுகள் சம்பந்தமான தமது நிலைப்பாட்டை திரிபின்றி தெளிவாக எடுத்தியம்புவது களத்திலுள்ள அரசியற்கட்சிகளது கடமையாகும். கனடியத் தமிழர் பேரவை எந்தவொரு கட்சியினது அறிக்கைக்கும் கொள்கைவிளக்கமளிக்க மாட்டது. இதற்கு மாறாக எமது அமைப்பின் பெயரால் வெளியாகிய எந்தச்செய்திகளுக்கும் கனடியத் தமிழர் பேரவைக்கும் எந்த விதமான சம்பந்தமுமில்லையென இத்தால் அறியத்தருகிறோம்."

 

Sincerely,

Professor R.

Subject: Re: Response from CTC regarding press statements
 
Dear Father Emmanuel,
The dinner was organized by Creative Writers Association (Mr.
Thangavelu) and Tamil Eelam Society (Mr. Gunanathan). The CTC did not
sponsor although individuals would have attended the event on their
personal basis. I am attaching the CTC's official position related to
the election.
 

Ranjan

 

My dear friends of the GTF, Greetings to you all!!!

I am writing again a letter to you all with the intention of helping one another in keeping the GTF working successfully towards its noble goal of freedom for our land and people.

I repeat again what I said in welcoming Rev. Jessy Jackson at the concluding Dinner in London. 

“ We have taken the  high road to Freedom and Peace

and we will walk majestically on.

Dogs will bark from the sides,

but we should walk majestically towards our goal”

 The Parliamentary Elections in our motherland and the reactions from the Diaspora Tamils to those, make me feel that the high profile we all, and BTF in particular, worked for and earned for the GTF by the Inaugural Conference in London  may soon be tarnished, if not lost, by our carelessness and indiscipline in our reactions.  

Let us not forget that the Inauguration event, not only put the GTF in a high profile, but also evoked hopes and expectations from all around, from the foreign governments as well as from the Diaspora Tamils that we of the GTF are launching a strong movement on behalf of the Eelam Tamils to get our rights in a democratic and non-violent manner. This is clearly attested by the panic created in the Sri Lankan government, among the Sinhalese and their media. 

Hence the urgency for the GTF to get down to task to fulfil the high expectations we have evoked. Hence it is my sacred duty as President, to keep reminding in a fatherly manner, some basic guide lines for our behaviour and actions as GTF members. All of you are well educated and qualified and have your own responsibilities in your context. You have volunteered to give your services to the sacred and noble cause of Freedom of our people. Our dedication and commitment to this cause cannot be second to anything; because we are following on the footsteps of heroes and martyrs. Many of you, like me, are direct witness of the selflessness, dedication and discipline in those who went before us. The temptation we of the Diaspora face is to dilute our commitment with a “freedom of the volunteered” and act more emotionally than responsibly. 

GTF is a Tamil-Diaspora organisation, functioning outside Sri Lanka, with a wider concern both for the humanitarian and human right issues as well as for the political goals of the Tamil struggle. If we neglect the first two and become more eloquent only regarding the political issues, we will loose our balance and credibility. Let us using all our talents and opportunities we have in our different country-contexts engage with respective governments, media and people to highlight those issues. Your efforts at country level will be taken up by the GTF at a higher level. 

As for the political task of the GTF, let me say the following. We have a task that cannot be done by our fellow-Tamils within Sri Lanka. Because we have the possibility of informing ourselves with almost everything happening within Sri Lanka, we tend to forget that we are in a Diaspora situation, with limited rights to interfere with the affairs of our fellow-Tamils within Sri Lanka, and with our own specific responsibility for the same Tamil cause. Instead of being concerned primarily with our own specific responsibility, we tend to be emotionally worked up and react to politicians and people with scant regard for our language and criticisms.  

In our Press Statement we expressed first our solidarity with our fellow Tamils and then in the last two paragraphs formulated the political stance of the GTF. We exhorted the people to vote only for those faithful to the fundamental aspirations of the Tamils and expressed our hope to support and work with politicians and political parties who are loyal to such fundamentals.  

The aim of the GTF with respect to events within Sri Lanka is to unite people and politicians as much as we can without divisions and go forward with our main tasks even after the elections. Let us not do anything that will exclude Tamil political leaders from further engagement with us.

Similarly it is the responsibility of the GTF to  “motivate and push from behind” the large and varied of the Tamil Diaspora, not only the member organisations but all Tamil Diaspora, in keeping them all in the same direction and goal, the freedom of our land and people.

 

Aariar enna kooth aadinaalum, naam kaariaththil kanna iruppom

Let our oppressors do all dancing, but we Tamils will concentrate on pursuing our goals!

 

S.J.Emmanuel

Germany 15.03.10

 


அன்புள்ள தமிழ் உடன்பிறப்புகளே,
“ஒன்றாய்ச் சேர்தல் தொடக்கம்: ஒன்றாய் இருத்தல் முன்னேற்றம்: ஒன்றாய்ச் செயற்படுதலே வெற்றி” இம்மடல் தங்கள் கைகளை நலமாக வந்தடையுமென நம்புகின்றேன். தலைவர் ஹென்றி போர்ட் அவர்களது மேலே தரப்பட்டுள்ள கூற்றை எண்ணிப் பார்க்கத் தமிழராகிய எமக்கு இப்பொழுதுள்ள நிலையிலும் சிறந்த நிலையொன்று இருக்க முடியாதென நான் நம்புகின்றேன்.

பெப்புரவரி 24 - 2010 அன்று இலண்டனிலுள்ள ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவையின் வெற்றிமிகு தொடக்க மாநாட்டை அடுத்து இம்மடலைத் தங்களுக்கு வரைவதில் பேருவகை அடைகின்றேன். அதேவேளை சிறீலங்காவில் வாழும் எம் உடன்பிறப்புகள் பலரது பெரும் கவலைக்குரிய நேரத்தில் இதை எழுதுகின்றேன் என்பதையும் அறிவேன்.

இப்பொழுது நிலவுகின்ற மனித அவலநிலை மற்றும் அரசியல் நிலை பற்றிப் பொதுவாகவும் தமிழர் எதிர்நோக்கியுள்ள நாடாளுமன்றத் தேர்தலைப் பற்றிக் குறிப்பாகவும் புதிதாக உருவாக்கப்பட்ட உலகத் தமிழர் பேரவையின் கருத்துக்களைக் கீழே தர முயற்சிக்கின்றேன். பாரிஸ் கூட்டத்தில் 14 நாடுகள் கூட்டாக வரைந்த உ.த. பேரவையின் நோக்கம் குறிக்கோள் ஆகியவற்றில் கூறப்பட்டதற்கு அமைய சிறீலங்காவில் உயிர் பிழைத்து வாழும் தமிழரது மாந்தநேய மற்றும் அரசியல் தேவைகளைத் திறமையாக நிறைவுசெய்ய நாட்டு அடிப்படையிலும் பன்னாட்டு அடிப்படையிலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழரை ஒன்று திரட்டி நாம் செயற்படுவோம்.

போரின் கடைசிக் கட்டத்தில் அப்பாவித் தமிழ் மக்களை பத்தாயிரக் கணக்கில் இரண்டகமாகக் கொடூரமான முறையில் கொன்று குவித்ததோடு குழந்தைகள் முதியோர் ஊனமுற்றோர் உட்பட 300 000 தமிழரை அனைத்துலக மனிதாபிமான உதவிகள் ஏதும் கிடைக்காத வகையிலும் செய்தி ஊடகங்கள் அணுகாத முறையிலும் மிக மோசமான நிலையில் வதைமுகாங்களில் தடுத்து வைத்துவிட்டுச் சிறீலங்கா அரசு இன்னமும் அம்மக்களது அவல நிலையை அனைத்துலகுக்கு மறைத்து வருகின்றது. அத்தோடு பாதிக்கப்பட்ட அம்மக்களுக்கு அனைத்துலக உதவி கிடைப்பதை வீம்புடன் தடுத்து வருகின்றது. முன்னர் வன்னி முகாங்களிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களில் ஓர் இலடச்த்திற்கு மேற்பட்டோர் வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் முதலிய இடங்களில் புதிய முகாங்களில் தகுந்த மறுசீரமைப்பு இன்றியும் அடிப்படை வாழ்க்கை வசதிகள் இன்றியும் மட்டுப்படுத்தப்பட்ட இடம்பெயர்வாற்றல் உடையவர்களாகவும் இன்னமும் உள்ளனர்.

சரணடைந்த இளைஞரில் ஆயிரக்கணக்கானோர் முறையான விசாரணையோ சட்டவியல் பிரதிநிதித்துவமோ அற்ற நிலையில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்துடன் கூடத் தொடர்பேதுமின்றி சிறைக்கூடங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

போரானது 2009 மே 19 அன்றோடு முடிவுற்றுவிட்டது என அரசு அறிவித்ததோடு மறுசீரமைப்புப் பணிகள் மீள்கட்டுமானப் பணிகள் மீளிணக்கம் ஆகிய துறைகளில் தானெடுக்கும் முயற்சிகள் பற்றி அனைத்துலகச் சமூகத்திற்கு உறுதிமொழி வழங்கிவிட்டு அவற்றை நிறைவேற்ற மெய்யாக முயற்சிக்காது மாறாகத் தமிழர் தாயகத்தில் தென்னிலங்கையிலிருந்து சிங்கள பௌத்த மக்களைக் கொணர்ந்து குடியமர்த்தும் தன் வேலைத்திட்டத்தை வளர்ச்சித்திட்டம் என்ற போர்வையில் நிறைவேற்றி தமிழ் மக்களின் மொழி மற்றும் இறைநெறி அடையாளத்தை அழித்து வருகின்றது. இந்த இக்கட்டான நிலையில் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இத்தேர்தலில் தமிழர் அடியோடு ஆர்வமற்றவர்களாக உள்ளனர். இதனை அண்மையில் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் தெளிவாகக் காட்டியுள்ளனர். இந்நிலையை இன்னுமிரு காரணிகள் மேலும் மோசமாக்கியுள்ளன. இவற்றுள் ஒன்று அரசில் தம் செல்வாக்கையும் பதவியையுமே வேண்டித் தமிழரது உண்மையான வேட்கைகளை வஞ்சனை செய்கின்ற அரசியல்வாதிகள் எம்மிடையே உள்ளனர் என்பதாகும். இவர்கள் மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு வன்முறையையும் ஊழல் வழிமுறைகளையும் கையாழுகின்றனர். அடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஏற்பட்டுவரும் பிளவுகளையும் சிதைவையும் பெரும் கவலையுடனும் ஏமாற்றத்துடனும் நாம் கண்டுவரும் நிலை. தமிழரது அடிப்படை வேட்கைகளை ஒரே குரலில் எடுத்தியம்புவதற்கான ஒற்றுமையை இது நலிவுபடுத்தி அடக்குமுறையாளரும் இரண்டகர்களும் தம் பணிகளை எளிதாகச் செய்ய வழிசெய்கின்றது.

எமது உடன்பிறப்புகள் அடிப்படை வாழ்க்கை வசதிகள் ஏதுமற்றுத் துன்புற்று, ஊழலையும் தமிழரது உண்மையான அடிப்படை உரிமைகள் பற்றிய குழப்பத்தையும் கலக்கத்தையும் எதிர்கொண்டுள்ள இவ்வேளையில் உலகத் தமிழர் பேரவையின் கீழ் ஒன்றுபட்டுள்ள புலம்பெயர்ந்த தமிழராகிய நாம் இலங்கைத் தீவில் உயிர்வாழ்வதற்கு இன்னமும் அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கும் எமது உடன்பிறப்புகளுக்கு எம் பரிவையும் கூட்டொருமையையும் முதற்கண் தெரிவித்துக் கொள்கின்றோம். அவர்களோடான எமது கூட்டொருமை, அக்கறை ஆகியவற்றின் சிறு அடையாளமாக வடகிழக்கில் இயங்குகின்ற நம்பகமிக்க அரசசார்பற்ற நிறுவனங்கள் ஊடாக உள் ஊரில் இடம்பெயர்ந்த, சிறப்பாக ஆதரவற்ற சிறுவர், கைம்பெண்கள் போன்றோருக்கு நிதியுதவி வழங்கும் பணியை ஏற்கனவே நாம் தொடங்கியுள்ளோம். மறுசீரமைப்பும் இயல்பு வாழ்க்கை நிலையும் பாதிக்கப்பட்ட அம்மக்களுக்கு வழங்கவேண்டிய பொறுப்பானது பாதிக்கப்பட்டோருக்குக்கான உதவி என்ற பெயரில் ஏராளமான நிதியுதவியைப் பெற்றுவரும் அரசுக்கே பெருமளவில் உரியதென்பதாலேயே சிறுஅடையாளமான உதவியெனக் குறிப்பிட்டுள்ளோம்.

பசி பட்டினியோடு அச்சமுற்றும் அச்சம் ஊட்டப்பட்டும் நாம் உள்ளோம். இன்றைய நிலையில் தமிழரது துயர துன்பங்களுக்கு முடிவு உண்டென்றால் அது எமது உண்மையான விடுதலையிலேயே தங்கியுள்ளது. எனவே இலங்கைத் தீவில் வாழுகின்ற எம் உடன்பிறப்புகளுக்கே எமது உண்மையான விடுதலைக்கான மூல அடிப்படைப் பொறுப்பு உள்ளது. ஆகையால் தம்வாக்குகளை இட்டு நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யும் போது தமிழரது விடுதலைக் குறிக்கோளுக்கு இரண்டகம் இழைக்கக்கூடிய பொய்யான அரசியல் தலைவர்களுக்கோ கட்சிகளுக்கோ ஆதரவு வழங்காது சிறீலங்காவிலும் வெளியேயும் வாழும் ஒட்டுமொத்தத் தமிழரது அடிப்படை வேட்கைகளில் பற்றுறுதியுடையோருக்கு ஆதரவு வழங்குமாறு நாம் பரிந்துரைத்து வலியுறுத்துகின்றோம்.

எமக்கு உள்ளார்ந்தமாக உள்ள தன்னாட்சி உரிமை, தமிழரது அடிப்படை வேட்கைகள், தமிழரது தேசியம், தாயகம், தன்னாட்சியுரிமை ஆகிய கோட்பாடுகளுக்குத் துணிவுடன் நிலைத்தியங்கக்கூடிய அரசியல் தலைவர்களையும் கட்சிகளையும் உலகத் தமிழர் பேரவையானது புலம்பெயர்ந்த தமிழரிடையுள்ள பல்வேறு வளங்களையும் திரட்டி ஆதரித்து அவர்களோடு சேர்ந்து பணியாற்றும்.

உலகத் தமிழர் பேரவை பற்றிய கூடுதல் தகவல்களைக் கீழே தரப்பட்டுள்ள எமது இணையத் தளத்திலிருந்து அறிந்து கொள்ளுமாறு வேண்டுகின்றேன்.

www.Globaltamilforum.org

உங்கள் உண்மையான
வண. எஸ் ஜெ. இமானுவேல்
தலைவர் - உலகத் தமிழர் பேரவை
10 மார்ச் 2010


 


 

Home இலங்கை செய்திகள் பொதுவான செய்திகள் தேசம், தேசியம், இறையாண்மை, சுயநிர்ணயஉரிமை எதனையும் கைவிடவில்லை: தமிழ் தேசியக் கூட்டமைப்பு.

தேசம், தேசியம், இறையாண்மை, சுயநிர்ணயஉரிமை எதனையும் கைவிடவில்லை: தமிழ் தேசியக் கூட்டமைப்பு.

செவ்வாய்க்கிழமை, 02 மார்ச் 2010 10:01

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியை உருவாக்கியமை தொடர்பாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கை தொடர்பிலான அறிக்கை ஒன்றினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியை உருவாக்கியமை தொடர்பாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வெளியிட்டதாக ஒரு கட்டுரை நேற்றைய யாழ் பத்திரிகை ஒன்றில் வெளியாகியது. அது தொடர்பான உண்மை விடயங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளிக்கொணர விரும்புகின்றது. மே மாதம் 2009 ஆம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பேரழிவிற்குப் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் நிலவிவந்த ஒற்றுமையை அதன் தலைமையான இரா சம்மந்தன், மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் திட்டமிட்டு சிதைத்துவிட்டனர் எனவும், கூட்டமைப்பின் பெரும்பான்மையான உறுப்பினர்களதும், மக்களினதும் செயற்பாட்டாளர்களினதும் பங்களிப்பு இல்லாது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அடிப்படைக் கொள்கைகளை கைவிட்டு அவசரத்தீர்வுத் திட்டம் ஒன்றைத் தயாரித்ததாகவும் தமிழ் காங்கிரசால் குற்றம்சாட்டப்படுகின்றது.

தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி என்ற அமைப்பு எங்கு நடந்த கூட்டத்தில் எப்படி உருவாக்கப்பட்டது. அதில் யார் யார் எல்லாம் பங்குபற்றினார்கள்? அதன் தலைவர் யார்? அதன் செயலாளர் யார்? இவை எதுவும் தமிழ் காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையில் இல்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெரும்பான்மையான அங்கத்தவர்களின் ஒத்துழைப்பின்றித்தான் ஒரு அரசியல் தீர்வுத்திட்டம் தயாரித்ததாகக் கூறுகின்றவர்கள் குறைந்தபட்சம் அப்படி எதிர் கருத்துள்ளவர்களுக்காவது தமது தேசியத்திற்கான மக்கள் முன்னணி உருவாக்குவதற்கு அழைப்புவிடுத்தார்களா? தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சிதைவிற்குக் காரணம் சம்பந்தன், சுரேஷ், மாவை எனக் கூறுபவர்கள் அவர்கள் தவிர்ந்த ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களில் எத்தனை பேருக்கு புதிய முன்னணி அமைக்க அழைப்பு விட்டனர். திருமலையில் தமிழ் காங்கிரஸ் சார்பாக போட்டியிடுபவர்களுக்கு இப்படி ஒரு முன்னணி உருவானதைப் பற்றியாவது தெரியுமா? தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் என்பது அது ஏற்படுத்தப்பட்ட நாளில் இருந்து சம்பந்தன், மாவை, சுரேஷ், செல்வம் அடைக்கலநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகிய ஐவரைக் கொண்ட தலைமைத்துவமாகவே இருந்து வந்திருக்கின்றது. கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் தலைவராக சம்பந்தன் இருந்ததுடன் தமிழரசுக்கட்சி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைமைத்துவத்தை சார்ந்தவர்களே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்திலும் இருந்தார்கள். இவர்கள் தவிர மேற்கண்ட கட்சிகள் சார்பாக தேர்தலில் வெற்றியடைந்துவந்த பிரதிநிதிகளும் தமிழீழ விடுதலைப் புலிகளினால் வன்னியிலும், யாழிலும், கிழக்கிலும் நியமிக்கப்பட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களையும் உள்ளடக்கியதாகவே இக் கூட்டமைப்பு இருந்தது. இதில் மூவரை மட்டும் பெயர் குறிப்பிட்டு சிதைவிற்கு காரண கர்த்தாக்கள் எனக் குற்றம் சாட்டும் கஜேந்திரகுமார் ஏன் செல்வம் அடைக்கலநாதன் உட்பட ஏனையோருக்கு அழைப்பு விடுக்கவில்லை. இது ஒன்றே இவர்களின் பொய்யான முகமூடிகளைக் காட்டவில்லையா?

மே மாதம் 2009 ஆம் ஆண்டிற்குப் பின் நாம் எமது கொள்கையில் இருந்து தடம் புரண்டோம் புதிய தீர்வுத் திட்டம் என்ற ஒன்றைத் தயாரித்தோம் என்று கூறும் பத்மினி, கஜேந்திரன் ஆகியோரிடம் ஒன்றைக் கேட்கவிரும்புகின்றோம். மே 2009 இற்கு முன்னரும் பின்னரும் நீங்கள் எங்கிருந்தீர்கள்? உங்களுடன் கலந்துரையாடவில்லை எனக் கூறும் நீங்கள் நோர்வேயிலும், இங்கிலாந்திலும் என்ன செய்து கொண்டிருந்தீர்கள். வருடக் கணக்காக வெளியில் இருந்த நீங்கள் இதற்கு மேலும் பாராளுமன்றத்தில் லீவு எடுக்க முடியாது. பதவிகளை காப்பாற்ற வேண்டும் என்ற பொழுது பாய்ந்தடித்து கொழும்பிற்கு வந்த நீங்கள் ஏன் ஒரு வருடம் முன்னரே வந்திருக்கக்கூடாது?
இவர்கள் கூறும் குற்றச்சாட்டுக்களில் ஒன்று தம்முடன் கலந்து பேசாமல் ஓர் தீர்வுத்திட்டத்தை உருவாக்கியிருக்கின்றோம் என்பது. அத்தீர்வுத் திட்டமானது கூட்டமைப்பின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முரணாக இருக்கின்றது என்பதும் அவர்களது வாதம்.

தீர்வுத் திட்டத் திட்டத்தயாரிப்பொன்றை மேற்கொள்வதற்காக இலங்கையில் இருந்த சம்பந்தன், கஜேந்திரகுமார், மாவை, சுரேஷ் ஆகியோர் அடங்கிய குழு (அப்பொழுது செல்வம் அடைக்கலநாதன் இங்கிருக்கவில்லை) கூட்டமைப்பின் ஆதரவு சக்தியான ஓர் சட்டத்தரணிகள் குழுவுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தி ஓர் வரைவை உருவாக்கும்படி அவர்களைக் கேட்டிருந்தோம். இக் கூட்டத்திற்கு கஜேந்திரகுமாரும் வந்திருந்தார். நாங்கள் கலந்துரையாடியது போக மேலதிகமான ஆலோசனைகள் இருப்பின் மின் அஞ்சல் ஊடாக அனுப்பும் படியும் சட்டத்தரணிகள் கேட்டிருந்தனர். இக் கூட்டம் முடிந்ததும் இங்கிலாந்து சென்ற கஜேந்திரகுமார் அவர்கள் இறுதிவரை தனது ஆலோசனைகள் என்னவென தெரிவிக்கவில்லை.
இரண்டாவதாக பலமாதங்களாக நாம் கேட்டுக்கொண்ட வரைபு (Draft) பூர்த்தி அடையாமல் இருந்தது. இதற்கு சட்டத்தரணிகளுக்கு நெருக்கடியாக இருந்த வேலைகளும் ஒரு காரணம். எனவே இவற்றை முடிப்பதற்கு இலண்டனில் இருந்த கஜேந்திரகுமாரையும் அழைத்தோம். அவருக்கு மேலும் இரண்டு வாரம் கால அவகாசம் தேவையாக இருந்தது. இங்கு சட்டத்தரணிகளுக்கு அவர் வரும் நாட்களில் நேரப்பிரச்சினை இருந்தது. இந்த சமயத்தில் தான் சில நாட்கள் இரவும் பகலும் உட்கார்ந்து ஓர் வரைபை செய்து முடித்தோம்.

பின்னர் இவ் வரைபு பாராளுமன்றக் குழுவின் கருத்தை அறிவதற்காக அவர்கள் முன் வைக்கப்பட்டது. வரிக்கு வரி விவாதிக்கப்பட்டது. இதில் திருத்தங்கள் தேவையா என ஆலோசனை கேட்கப்பட்டது. சிலரால் திருத்தங ;கள் முன் வைக்கப்பட்டன. இதில் மிகப் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் வரைபை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் கஜேந்திரகுமார், கஜேந்திரன், பத்மினி போன்றோருக்கு முரண்பாடுகள் இருந்ததாகக் கூறப்பட்டது. பின்னர் கஜேந்திரகுமார், பத்மினி போன்றோர் சட்டத்தரணிகள் உடனான கலந்துரையாடல்களுக்கு அழைக்கப்பட்டனர். அங்கும் பல மணிநேரம் விவாதித்து தீர்வுத் திட்டத்தை ஏற்றுக் கொண்டனர். ஷஷஇதிலுள்ளவற்றை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்க முன் வருமானால் அது பெரிய விடயம்' என்ற பதிலைத்தான் அன்று கஜேந்திரகுமார் சட்டத்தரணிகளிடம் கூறினார். இவர் தான் இன்று கூறுகின்றார் மூன்று பேர்களால் இரகசியமாக உருவாக்கப்பட்ட ஓர் தீர்வுத் திட்டம் என்று. ஓர் வரைபு உருவாக்கப் பட்டால் தான் அதில் உள்ள சரி பிழைகள், என்ன மாற்றம் செய்ய வேண்டும் போன்ற விடயங்களைப் பற்றிப் பேசலாம். அதனைத் தான் நாங்கள் செய்தோம். அதன் பின்னர் விவாதித்தோம், திருத்தினோம் என்பது தான் உண்மை. எந்த ஒரு வரைபும் இல்லாமல் ஒரு விடயத்தைப் பேசுவோமாக இருந்தால். அது பேசிய இடத்துடன் முடிந்துவிடும். அந்த அடிப்படையில் தான் எம்மால் ஒரு வரைபு உருவாக்கப்பட்டது. கஜேந்திரகுமாருக்கு மாற்றுச் சிந்தனை இருக்குமானால் வேறு ஒரு வரைபை முன்வைத்து விவாதித்திருக்கலாம். ஆனால் தத்துவங்களைப் பேசுவோர் அது எதனையும் முன் வைக்கவில்லை. எனவே தமக்குத் தெரியாமல் தீர்வுத் திட்டம் தயாரிக்கப்பட்டது என்பது முழுமையான பொய்யாகும்.

இப்பொழுது இன்னுமொரு விடயத்தை முன்வைக்கின்றார். அதாவது 'தமிழ் மக்கள் ஓர் தனித்துவமான தேசிய இனம் இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு பிராந்தியம் தமிழர்களின் தாயகம், தமிழ் தேசத்திற்கு சுயநிர்ணய உரிமை உண்டு' இவை 2001, 2004 ஆம் ஆண்டுகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் சுட்டிக்காட்டப்பட்டன. இதிலிருந்து யாரும் விலகமுடியாது என காங்கிரஸ் கஜேந்திரகுமார் கூறுகின்றார். இதை கஜேந்திரகுமார் சொல்லித்தான் யாரும் அறியவேண்டியதல்ல. 1976 வட்டுக்கோட்டைத் தீர்மானத்திலும், 1985 திம்புப் பிரகடனமாகவும் அதனை வெளியிட்டவர்கள் கூட்டணியும், ரெலோவும், ஈபிஆர்எல்எப், எல்ரீரீ போன்ற அமைப்புக்கள். கூட்டமைப்பில் இருக்கும் TELOவும், EPRLFஉம் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக ஆயுதம் எடுத்துப் போராடியவர்கள். அதேபோன்று வடக்கு கிழக்கு இணைப்பதற்கு இறுதிவரை போராடியது கூட்டணி, அதிலும் பிரத்தியேகமாக திரு சம்பந்தனின் தனிப்பட்ட முயற்சி இதில் மிகவும் கனதியானது.

வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் ஓர் தேசிய இனம், அவர்கள் தொடர்ச்சியான நிலப்பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுக்கென தனித்துவமான மொழி, கலை, கலாசாரம், பண்பாடுகள் உள்ளன. அவர்களது பிரதேசத்திற்கான பொருளாதார வளங்கள் உண்டு. இந்த அடிப்படையில் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு. இவற்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் யாரும் மறுதலித்தது கிடையாது. இந்த சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் காணி, பொலிஸ், நிதி உட்பட முழுமையான அதிகாரப் பகிர்வொன்று சமஷ்டி அரசியல் அமைப்பு முறையின் ஊடாக உருவாக்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோருகின்றது. இதனை எந்த ஒரு இடத்திலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு விட்டுக் கொடுத்தது கிடையாது.

'சிறீலங்காவின் இறையாண்மையை ஏற்றுக் கொள்ள முடியாது தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை தனித்துவமான தேசம் ஆகியவற்றின் அடிப்படையில் தான் வட்டுக்கோட்டைப் பிரகடனம் செய்யப்பட்டது. அதிலிருந்து கூட்டமைப்பு விலகிவிட்டது' என்றும் தாம் மாத்திரம் தான் மேற்கண்ட கொள்கைகளில் உறுதியாக இருப்பது போன்ற புலுடாவை விட சிலர் ஆரம்பித்துள்ளனர். சிறீலங்காவின் இறையாண்மையை ஏற்றுக்கொள்ளவில்லை எனக் கூறிக்கொள்பவர்கள் என்ன அடிப்படையில் ஆறாவது திருத்தச் சட்டத்தின் கீழ் இலங்கை அரசிற்கும் அதன் அரசியல் சாசனத்திற்கும் விசுவாசமாக இருப்பேன் என சத்தியப் பிரமாணம் செய்கின்றார்கள். வேட்பு மனுத் தாக்கல் செய்யும் பொழுதும், வெற்றி அடைந்து பாராளுமன்றத்திற்குப் போகும் பொழுதும், இந்த சத்தியப் பிரமாணத்தைச் செய்து தானே போகின்றார்கள். அப்பொழுது சிறீலங்காவின் இறையாண்மையை ஏற்றுக் கொண்டார்களா? இல்லையா? தமிழ் மக்களுக்கு அரசியலைப் பற்றி ஒன்றும் தெரியாது, ஏமாற்றிவிடலாம் என்று சிந்திக்கின்றார்களா? உண்மையாகவே சிறீலங்காவின் இறையாண்மையை இவர்கள் ஏற்றுக் கொள்ளாவிடின் பாராளுமன்ற அரசியல் முறையைக் கைவிட்டு அவர்கள் சொல்கின்ற தனித்துவத்தின் அடிப்படையில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக போராட வேண்டும். அப்படிச் செய்தால் அதில் ஒரு அர்த்தம் இருக்கும். அதனை விடுத்து சொல் வேறாகவும், செயல் வேறாகவும் இருப்பது சுத்த ஏமாற்றுவித்தையே தவிர வேறல்ல.

இவை ஒருபுறம் இருக்க இலங்கையின் இறையாண்மையை ஏற்றுக் கொள்ள முடியாது. இலங்கை இரு தேசங்களின் கூட்டு எனக் கூறும் இவர்கள் இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்கான தீர்வாக இத் தத்துவத்தையே கூறிக்கொண்டிருக்கப் போகின்றார்களா? இல்லையேல் இதன் அடிப்படையில் ஏதாவது தீர்வுத் திட்டம் இவர்களிடம் உண்டா? இனப்பிரச்சினைத்தீர்வின் அடுத்த கட்டம் நோக்கி எவ்வாறு பயணிக்கப் போகின்றோம். சுலபமாகத் தத்துவம் பேசலாம். அதற்கான காரண காரியங்களையும் விளக்கலாம். ஆனால் அவையெல்லாம் தமிழ் மக்களுக்கு தீர்வை ஏற்படுத்தித் தருமா? முப்பது வருட அகிம்சைப் போராட்டம் 30 வருட ஆயுதப் போராட்டத்தின் பின் தோல்வியுற்ற தீர்வுப் பாதைக்கு, மீண்டும் திரும்புகின்றோம் என குற்றச் சாட்டுக்களை முன்வைக்கின்றார்கள். 60 வருடப் போராட்டத்தின் பின் எதுவும் இல்லை என ஒதுங்கப் போகின்றோமா? அல்லது காங்கிரஸ் கஜேந்திரகுமார் போல் தத்துவம் பேசுவோம் ஆனால் தீர்வைப் பற்றி அக்கறை இல்லை என இருக்கப் போகின்றோமா? அல்லது தமிழ் மக்களின் தேசம், தேசியம், இறைமை இவற்றைக் காப்பாற்றக் கூடிய ஒரு தீர்வை நோக்கிப் போகப் போகின்றோமா? தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரட்டுத் தனமாக தத்துவம் பேசிக் கொண்டிருக்க விரும்பவில்லை. அதே சமயம் எமது அடிப்படைக் கொள்கைகளை விட்டுக் கொடுக்காமல் தமிழ் மக்களுக்கு நீதியான ஒரு தீர்வை நோக்கி நாம் போக வேண்டுமென விரும்புகின்றோம். விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக பலம் பொருந்திய அமைப்பாக இருந்த பொழுது அவர்களுக்கு பேரம் பேசும் ஆற்றல் இருந்தது. அதன் ஊடு தமிழ் மக்களுக்கு உச்சபட்ச அதிகாரங்களை அவர்கள் பெற்றுக் கொடுப்பார்கள் என நாங்கள் எல்லோரும் எதிர்பார்த்தோம். மாறாக இராணுவப்பலம் சிறீலங்கா இராணுவத்தால் நிர்மூலம் செய்யப்பட்டது. யுத்தத்தில் வென்ற அரசு தமிழர்களுக்கு எதுவுமே கொடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றது. புலிகளும் இல்லை. எமக்கு பேரம் பேசும் வலுவும் இல்லை. இந்த நிலையில் அடுத்த கட்டத்தை நகர்த்துவது என்பதை சிந்திக்கவேண்டும்.

இன்று எமக்கு இருக்கக் கூடிய ஒரே ஒரு சாதகமான நிலைமை சர்வதேச சமூகம் காட்டக் கூடிய குறைந்தபட்ச அக்கறை. ஐக்கிய நாடுகள் சபையும் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவும் இன்னும் பல நாடுகளும் எமது இனப்பிரச்சினைக்கு நீதியான தீர்வு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் எனக் கூறுகின்றார்கள். எனவே இவர்களின் ஆதரவுடன் தீர்வொன்றை எட்டுவதற்கு முயற்சிப்பதே புத்திசாலித்தனமான சிந்தனையாக இருக்க முடியும். சர்வதேச சமூகத்தின் ஆதரவை நாம் பெற்றுக் கொள்ளவேண்டுமாயின், எமது அடிப்படைக் கோட்பாடுகளை விட்டுக்கொடுக்காமல் அதே சமயம் கடும் போக்காளர்கள் என்னும் தன்மையைக் காட்டிக்கொள்ளாமல் தமிழ் மக்கள் சுதந்திரமாகவும் கௌரவமாகவும் அதிகாரங்களுடன் தம்மைத் தாமே ஆளக்கூடிய ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைக்க வேண்டும். அப்படியான ஓர் திட்டத்தைத்தான் கூட்டமைப்பு உருவாக்கியது. எமது தீர்வுத்திட்டத்தை சர்வதேச சமூகம் நிராகரிப்பது கடினமானது ஏனெனில் உலகின் பல பாகங்களில் இவ்வாறான சமஸ்டி அரசியல் அமைப்பு முறையிலான தீர்வுத்திட்டங்கள் இருக்கின்றன. ஆனால் 13வது திருத்தத்தையே கொடுக்க விரும்பாத இலங்கை அரசு அவ்வாறான தீர்வுத் திட்டத்தையே ஏற்றுக் கொள்ளமாட்டாது என்பதையும் நாங்கள் அறிவோம். இந்த நிலையில் சர்வதேசம் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை இலங்கை நிராகரிக்கும் பொழுது இலங்கை மீது அழுத்தம் செலுத்தவோ, அல்லது தமிழ் மக்களின் இனப்பிரச்சனைத் தீர்வுக்கு வேறு வழிமுறைகளை கையாளவேண்டிய தேவையோ சர்வதேசத்திற்கு ஏற்படலாம். எனவே கூட்டமைப்பின் தீர்வுத்திட்டம் என்பது தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை விட்டுக்கொடுக்காத அதிகபட்ச அதிகாரங்களைக் கொண்ட அதேசமயம் சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுத் திட்டமாகவே இதனை நாம் தயாரித்தோம். இதன் மூலம் சர்வதேச சமூகத்தை எமது ஆதரவு சக்தியாக மாற்றமுடியும் என்பதுடன், அரசாங்கத்தின் தமிழ் மக்களுக்கு எதிரான நியாயமான தீர்வுக்கெதிரான போக்குகளையும் சர்வதேச அரசுகள் புரிந்துகொள்ளச் செய்யலாம். ஆனால் இதனை விடுத்து இலங்கையின் இறையாண்மையை ஏற்றுக்கொள்ளமுடியாது. இலங்கை இலங்கை இரு தேசங்களின் கூட்டு எனக் கூறும் பொழுது வெளி உலகமோ, சர்வதேச சமூகமோ சரி எமக்குக் கிட்டவும் நெருங்கியும் வராது. இதனை ஏற்றுக்கொள்ளவும் மாட்டாது என்பதையும் புரிந்து கொள்ளவேண்டும்.

வன்னியில் மூன்று இலட்சம் இடம்பெயர்ந்த மக்கள், யாழ்ப்பாணத்தில் ஒரு இலட்சம் இடம்பெயர்ந்த மக்கள் இவர்களது வாழ்விடங்கள் வாழ்வாதாரங்கள் எல்லாமே அழிக்கப்பட்டு விட்டது. 30வருட யுத்தத்தில் இழக்கக்கூடாத சகலவற்றையும் தமிழ் மக்கள் இழந்துவிட்டார்கள். யாழ்ப்பாணம், வன்னி மற்றும் கிழக்கு ஆகிய பகுதிகள் இராணுவ ஆக்கிரமிப்பால் நிரம்பிவழிகின்றன. இராணுவக் குடியேற்றமும் அதனைத் தொடர்ந்து சிங்களக் குடியேற்றத்திற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. ஈழத்தின் தலைநகரம் திருகோணமலை எமது கையை விட்டுப் போகும் சூழல். இந்த நிலையில் மிக விரைவில் வடகிழக்கின் அதிகாரத்தை எமது கையில் எடுக்கப் போகின்றோமா? அல்லது தத்துவம் பேசிவிட்டு உட்காரப் போகின்றோமா? எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பாகிய நாம் தேசம், தேசியம், இறையாண்மை, சுயநிர்ணய உரிமை எதனையும் விடவில்லை. ஆனால் தந்திரோபாயமாக இன்றிருக்கும் எமக்கு சாதகமாக சர்வதேச சூழலைப்பயன்படுத்தி தீர்வைக்காண முயற்சிக்கின்றோம். ஆனால் இலங்கையின் இறையாண்மையை ஏற்றுக் கொள்ளாதவர்கள் எந்தத் தீர்வுத்திட்டமும் இல்லாமல் கூட்டமைப்பை விமர்ச்சிப்பதும் குற்றம் சுமத்துவதும் அர்த்தம் அற்றதும் ஏற்றுக் கொள்ள முடியாததும் ஆகும்.

தேசம், தேசியம், இறையாண்மை எல்லாவற்றையும் விடுத்து இந்தியா கூறியது போன்று நாம் தீர்வுத் திட்டம் தயாரித்ததாகவும் இவர்கள் கூறுகின்றார்கள். இது சுத்த அபத்தமானதும் பைத்தியக்காரத்தனமானதுமாகும். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தீர்வு இவ்வாறு தான் இருக்க வேண்டும் என இந்தியா அறிவுறுத்தியது கிடையாது. அது தொடர்பாக நாம் கலந்துரையாடியதும் கிடையாது. மாறாக புலிகள் அழிக்கப்பட்ட சூழ் நிலையிலும் இலங்கை அரசாங்கம் ஒரு தீர்வை முன்வைக்காத சூழ் நிலையிலும் நாம் ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைப்பதன் மூலமே சர்வதேசத்தை எம்மை நோக்கி அணி திரளச் செய்ய முடியும் என யோசித்தோம். அந்த அடிப்படையில் மிக நீண்ட கலந்துரையாடல்களின் பின்பே ஒரு வரைபு உருவாக்கப்பட்டது. (அதன் விபரம் மேலே தரப்பட்டது)

கடந்த ஜனாதிபதித் தேர்தலை பகிஸ்கரிக்க வேண்டும் என அறிக்கை விடுத்த திரு கஜேந்திகுமார் அடுத்த கணமே இலண்டன் சென்றுவிட்டார். பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட சிலநாட்களின் பின்னர் வந்தார். கூட்டமைப்பின் கட்சிகளில் ஒன்றென்ற வகையில் வேட்புமனுக்களைப் பரிசீலிக்கும் குழுவில் அவரும் ஒரு அங்கத்தவர் என்ற வகையில் அவரும் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் தனக்கு அடிப்படையில் முரண்பாடுகள் உள்ளதாக கூறியதன் அடிப்படையில் அது தொடர்பாக இரண்டு மணி நேரம் கலந்துரையாடப்பட்டது. தனது கட்சிக்குழுவில் பேசி முடிவெடுத்துவிட்டு மாலை எமக்கு அறிவிப்பதாக கூறியவர் இரண்டு நாட்களாக எம்முடன் தொடர்பு கொள்ளவில்லை. எமது தொலை பேசித் தொடர்புகளையும் அவர் பேசாமலேயே நிராகரித்தார். இதன் பின்பு காங்கிரசின் தலைவர் திரு விநாயகமூர்த்தியின் முயற்சியால் ஒரு சில சட்டத்தரணிகள் சமரசம் பேச முற்பட்டனர். இவருக்காகவே ஏற்கனவே வரையப்பட்ட தீர்வுத்திட்டத்தை விடுத்து தேர்தலின் பின்னர் எல்லோரும் இணைந்து ஒரு புதிய தீர்வுத்திட்டத்தை உருவாக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது. அது எழுத்திலும் உள்ளது. ஆனால் கஜேந்திரகுமார் அவர்கள் ஏகமனதான முறையில் இத் தீர்வுத்திட்டம் அமையவேண்டும் எனக் கூறினார். பெரும்பான்மை முடிவுகளின்  அடிப்படையில் தீர்வுகள் எடுக்க முடியுமே தவிர ஏகமனதானதென்று எதற்கும் ஒத்துவராது, எல்லாவற்றையும் மறுதலிக்கும் வீற்றோ அதிகாரத்தை யாருக்கும் கொடுக்க முடியாது என்பதை அவர்களுக்குத் தெரிவித்தோம். இறுதியாக இதனை ஏற்றுக்கொண்டு அடுத்த நாள் வேட்புமனுக்களைப் பரிசீலனை செய்ய சம்மத்தித்தார். ஆனால் கூட்டத்திற்கு வந்தவர் தனது செயலாளரையும் இன்னும் இருவரையும் எம்முடன் பேசும்படி கூறிவிட்டு அவர் போய்விட்டார். அவர்கள் கேட்ட எல்லாவற்றிற்கும் சம்மதம் அளிக்கப்பட்டது. ஆனால் போனவர்கள் மீண்டு(ம்) வரவில்லை. திரு சம்பந்தன் கஜேந்திரகுமாருடன் பேச எடுத்த முயற்சியும் சில சட்டத்தரணிகள் (ஏற்கனவே சமரசம் பேசியவர்கள்) அவருடன் பேச எடுத்த முயற்சியும் நிறைவேறவில்லை. அடுத்த நாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதாக கஜேந்திரகுமார் பத்திரிகைகளுக்கு அறிக்கைவிடுத்தார். இதில் ஒரு விடயம் மிகத் தெளிவாகத் தெரிகின்றது. அதாவது இலண்டனில் இருந்து வரும் பொழுதே அவர் கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது என்ற முடிவுடனேயே வந்தார். ஆனால் கூட்டமைப்பை சிதறடிக்கக் கூடாது என்பதற்காக நாம் இறுதிவரை முயற்சி செய்தோம். ஆனால் அவர் அதற்கு செவிசாய்க்கவில்லை. இதனை காங்கிரஸ் தலைவர் விநாயகமூர்த்தியிடமும் அவரது நட்பு சட்டத்தரணிகளிடமும் கேட்டும் தெரிந்கொள்ளலாம். நிலைமை இவ்வாறு இருக்க எல்லாவற்றையும் திரித்தும் பொய்யாகவும் கூறமுற்படுவது அரசியல் வங்குரோத்துத் தனமே அல்லாமல் வேறல்ல. வெளிநாட்டில் இருக்கக் கூடிய ஓரிரு குழுக்களின் வழிகாட்டுதலில் தான் இது நடைபெறுகின்றது. எமது தமிழினத்தை இன்னும் பாரிய அழிவிற்கு இட்டுச் செல்லும் என்பதை கடும் போக்காளர்கள் எனத் தம்மைக் கருதுவோர் புரிந்துகொள்ளவேண்டும்.

இறுதியாக தமிழ் தேசியம் பற்றிப் பேசுபவர்கள் யாழ்ப்பாணத்திலும் திருகோணமலையில் மாத்திரம் தான் போட்டியிடுகின்றார்கள். இவர்களின் தேசம் என்பது இவ்விரு மாவட்டங்கள் மட்டுமாக இருக்கலாம். அதிலும் தமிழ் தேசியக்கூட்டமைப்பிடம் ஓர் ஆசனம் கேட்டு நிராகரிக்கப்பட்ட கௌரி முகுந்தன் என்பவர் தான் தேசியம் பேசுபவர்களின் திருகோணமலையின் முதன்மை வேட்பாளர். சிறீலங்கா சுதந்திரக்கட்சியில் அலரிமாளிகையில் அங்கத்துவம் பெற்று ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்சவை ஆதரித்தவர் தான் இவரின் முதன்மை வேட்பாளர். திருகோணமலையில் சம்பந்தனைத் தோற்றகடிக்க வேண்டும் என்பது இலங்கை அரசின் திட்டம் அதற்காகவே பல சுயேட்சைக்குழுக்களுடன் பிள்ளையான் போன்றவர்களும் களமிறக்கப்பட்டனர். அவரைத் தோற்கடிக்கத்தான் திருகோணமலையில் காங்கிரசும் போட்டிபோடுவதாக கஜேந்திரகுமாரும் கூறுகின்றார். உங்களுக்கும் ராஜபக்சவிற்கும் என்ன வித்தியாசம்? திருகோணமலையில் தமிழருக்குக் கிடைக்ககூடிய ஓர் ஆசனத்தையும் இல்லாமல் செய்வதுதான் உங்களது தேசியமா? என்பதை தயவு செய்து சொல்லுங்கள்?

என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை, 02 மார்ச் 2010 10:24 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது