திரு இதயச்சந்திரன்
நடந்ததைப் பற்றி மீள்வாசிப்பது தவறுகள் விடப்பட்டிருந்தால் அவற்றைத் திருத்திக்கொள்வதற்குத்தான்.
ஒரு மக்களாட்சி முறைமையில் தேர்தல் புறக்கணிப்பு வெற்றி தராது. 1990 இல் புலிகள் தேர்தலைப் புறக்கணித்த போது 11,000 வாக்குகளை மட்டும் பெற்று இபிடிபி 9 நா.உ. நாடாளுமன்றம் போனது. அதே போல் 1989 சனாதிபதித் தேர்தலை அய்க்கிய தமிழர் விடுதலை முன்னணி புறக்கணித்தது. தமிழ்மக்கள் தேர்தல் களத்தில் நின்ற ஒரேயொரு தமிழரான குமார் பொன்னம்பலத்துக்கு வாக்குப் போட்டார்கள்.
2005 ஆண்டு மகிந்த இராசபக்சே வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தமிழர்களுக்குத் தாயகம் இல்லை, தன்னாட்சியுரிமை இல்லை, தேசியம் இல்லை என அப்பட்டமாக சொல்லப்பட்டிருந்தது. அதே நேரம் ரணில் விக்கிரமசிங்கி இனச் சிக்கலுக்கு இணைப்பாட்சி முறையில் தீர்வு காண முயற்சி செய்யப்பட வேண்டும் என அய்க்கிய தேசியக் கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இயக்கம் என்ன செய்திருக்க வேண்டும்? இந்த இரண்டு தேர்தல் அறிக்கையையும் அதன் தலைமைகளையும் நன்கு ஆராயந்து இருக்க வேண்டும். பாதக சாதகம் பற்றி பல நாள் விவாதித்து இருக்க வேண்டும். ஆனால் அப்படியெல்லாம் நடந்ததாகத் தெரியவில்லை.
இந்தியா எங்களிடம் வருவது சாத்தியம். வரட்டும். அதற்கு முதல் வடக்கு சிங்கள - பவுத்த மயமாக்கப்படப் போகிறது. இதுதான் இன்றுள்ள பூதாகாரமான சிக்கல். இதை மறந்து நாம் முட்டையை நுனிப்பக்கமாக உடைக்க வேண்டுமா? அடிப்பக்கமாக உடைக்க வேண்டுமா? என்பதில் நேரத்தையும் நினைப்பையும் செலவழித்துக் கொண்டிருக்கிறோம். இதுதான் எனது ஆதங்கம். இதுதான் எனது கவலை.
நக்கீரன்
June 12, 2010
Dear TNA Supporters
Please see the attached document titled Establishing a Research Center/Head Quarters for TNA.
As you may be aware the TNA proposes to set up a Research Centre/Headquarters in Colombo with the following objectives:
a) To provide rehabilitation and resettlement for people displaced by war and high security zones and other war related actions.
b) To take steps to free youth held in detention camps by the government and help in their rehabilitation.
c) To find a political solution to the ethnic conflict that will fulfill the aspirations of the Tamil speaking people.
As you will find the entire Project costs Rs.9, 050,000
Canadian TNA supporters have been asked to bear the Capital Cost and Rent Advance. The balance will be funded by TNA Members of Parliament and Tamil Diaspora other than Canada.
Therefore, I am appealing to all of you to contribute at least $1000 as soon as possible. We have printed tickets of $1000, $500, $100, $50, $20 denominations.
After May 17, TNA has emerged as the only credible political voice of the Tamil people. Let us strengthen the TNA since its strength is our strength as well.
Veera Vijenthira
Convener
TNA Fund Raising
Committee
Canada
Establishing a Research Center/Head Quarters for TNA
1.) Project Title: Establishing a Research Center/Head Quarters for TNA
2.) Project Objective: To facilitate the following activities:
a) To provide rehabilitation and resettlement for people displaced by war and high security zones and other war related actions
b) To take steps to free youth held in detention camps by the government and help in their rehabilitation
c) To find a political solution to the ethnic conflict that will fulfill the aspirations of the Tamil speaking people
3.) Project Background:
a) The Vanni people who were displaced due to the war from mid 2008 till May 2009 and who are now in internment camps as well as those who are supposed to be resettled in their homes lack adequate food, clothing, shelter, education, medical facilities and livelihood opportunities. In some areas the situation is critical.
b) Large numbers of those who were displaced in the Eastern Province due to war from 2006 -2008 have not been resettled in their homes and are forced to live with their relatives or in camps.
c) As a result of the “High-Security Zone” people who were forcibly removed from their homes have still not been allowed to go back. These people are also living with relatives or in camps.
d) After May 2009 the struggle to achieve legitimate Tamil aspirations has met with a setback. Certain forces in Sri Lanka take the view that there is no need to address Tamil aspirations any longer. Under these circumstances TNA has to shoulder the responsibility to advance Tamil People’s aspirations through democratic and diplomatic means and ensure that there is a just and acceptable resolution of the conflict relating to the Tamil speaking People, particularly in the North East.
e) Those people who are referred to in 3(a) 3(b) 3(c) cannot depend on the government to rehabilitate and re-settle them in their former villages. TNA must fulfill this responsibility by lobbying aid from foreign governments and funding agencies and the Tamil Diaspora.
We cannot also expect the Sri Lankan Government to voluntarily offer a political solution that will satisfy fully the aspirations of the Tamil people. Thus, the TNA must lobby foreign governments to apply pressure on the Sri Lankan Government. To achieve this, TNA must meet with foreign diplomats and leaders with necessary documentation. To perform these tasks satisfactorily, TNA will need a well furnished and well manned office in Colombo that would also undertake all necessary research activity in this regard.
4.) Project Implementation:
Parliamentarians consisting of Messrs. R. Sampanthan, M.A. Sumanthiran, and Mavai Senathirajah will be tasked with the responsibility to implement this project.
5.) Beneficiaries:
Those who stand to benefit from this project are those Tamil people including the 600,000 internally displaced 12,000 youths in detention and other victims.
6.) Budget:
Capital Cost Rs. 1,251,000
Recurring Cost Rs. 1,740,000
Salaries & Wages Rs. 4,740,000
Rent Advance Rs 1,200,000
Architect’s consultancy and
Rs.
119,000
contingencies
(Total) Rs. 9,050,000
Canadian TNA supporters have been asked to bear the Capital Cost and Rent Advance. The balance will be funded by TNA Members of Parliament and Tamils in Diaspora other than Canada.
7.) Auditing:
The TNA will appoint a firm of Chartered Accountants to audit financial transactions for the information of donors.
8.) Evaluation:
At the end of this project, a group of evaluators appointed by the donors of this project will determine the success of this project
APPENDIX
Research Centre and Office
Capital Cost
Description No. Unit Cost Total Cost
Rs. Rs.
Leader’s Table 01 15,000 15,000
Leader’s Chair 01 10,000 10,000
Chairs 04 5,000 20,000
Deputy’s Table 01 10,000 10,000
Deputy’s Chair 01 8,000 8,000
Chairs 03 5,000 15,000
Conference Table ( for 12 ) 01 30,000 30,000
Conference Chairs 25 4,000 100,000
Writing Tables ( Research Assistants ) 02 8,000 16, 000
Computer Tables 04 8,000 32,000
Computer Chairs 04 7,500 30,000
Computers ( non branded ) 06 75,000 450,000
Photo copier 01 150,000 150,000
Fax Machine 01 20,000
ADSL Installation 06 2,500 15,000
PABX (12 connections ) 01 200,000
Book Racks 05 8,000 40,000
Steel Cupboards 02 10,000 20,000
Filing Cabinets 04 10,000 40,000
Other Office Requisites ( binding machine,
Puncher, stapler etc.) ( sum ) 30,000
----------------
1,251,000
----------------
Recurrent Cost
Description Monthly Cost Annual Cost
Rs. Rs.
Rent of Building 100,000 1,200,000
Assessment Tax 2,500 30,000
Electricity 25,000 300,000
Water Supply 2,500 30,000
Building Maintenance 5,000 60,000
Stationery 10,000 120,000
--------------
!,740,000
Salaries and Wages N0. Unit Cost Monthly Cost Annual Cost
Rs. Rs. Rs.
Chief Executive Officer 01 90,000 90,000 !,080,000
Secretary ( with computer skill) 01 35,000 35,000 420,000
Library Assistant 01 25,000 25,000 300,000
---------------
1,800,000
----------------
Research Assistants 02 40,000 80,000 960,000
Data Entry Operator 03 35,000 105,000 1,260,000
Office Aides 02 15,000 30,000 360,000
Security 02 15,000 30,000 360,000
--------------
2,940,000 SUMMARY
Rs.
Capital Cost 1,251.000
Recurrent Cost 1,740,000
Salaries and Wages 4,740,000
-------------------
7,731,000
Architect’s consultancy and contingencies 119,000
Rent Advance 1,200,000
----------------------
Total 9,050,000.00
------------------------
FUNDING
Diaspora – Capital, Recurrent and part of salaries totaling Rs, 6.110 million. Say Rs.6 million.
Members of Parliament – Rs. 2.940 million, being part of salaries. Say Rs.3 million.
Cost in the second year will be less by Rs. 1 million as there is no repetition of capital items . There is need however for rising costs. It is safe to plan for Rs. 8 million per annum to run the Research Centre and the Office.
ஆசிரியர்
உதயன்
யாழ் மாவட்டத்தில் தமிழ்க் கூட்டமைப்பின் தேர்தல் பின்னடைவுக் காரணம் என்ன என்பதை நிலத்தில் உள்ளவர்கள்தான் சொல்ல வேண்டும். புலத்தில் உள்ள நான் சொல்வது அவ்வளவு பொருத்தமாக இருக்காது என நினைக்கிறேன்.
வேட்பாளர் சி.வி.கே. சிவஞானம் பேசியவற்றை உதயன் கட்டுரையாகப் பிரசுரித்ததன் மூலம் அவரது கருத்தோடு உதயன் ஒத்துப் போவதை அல்லது வழிமொழிவதை எடுத்துக்காட்டுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெற்றிருந்த பொன்சேகாவுக்குக் கிடைத்த வாக்குகளை விட பொதுத் தேர்தலில்
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நாற்பதாயிரம் வாக்குகள் குறைவானது என்பது முற்றிலும் சரியல்ல. பொன்சேகாவுக்கு விழுந்த 113,877 வாக்குகளில் பொதுத் தேர்தலில் அய்க்கிய தேசிய முன்னணிக்கு விழுந்த 12624 வாக்குகளும் உள்ளடக்கம் என்பதை மறந்துவிடக் கூடாது. மேலும் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட சுயேட்சைக் குழுக்கள் கணிசமான வாக்குகளைப் பிரித்துள்ளார்கள். அதே போல் சின்னச் சின்ன கட்சிகளும் வாக்குகளைப் பிரித்துள்ளார்கள்.
மகிந்த இராசபக்சேக்கு ஆட்சித்தலைவர் தேர்தலில் 44154 வாக்குகள் கிடைத்தன. பொதுத்தேர்தலில் அய்க்கிய மக்கள் சுதந்திரமுன்னணிக்கு (இபிடிபி உட்பட) 47632 வாக்குகள் கிடைத்தன. அதாவது மேலதிகமாக 3478 வாக்குகளே கிடைத்தன. எனவே மகிந்தாவுக்குப் போடப்பட்ட வாக்குகள் பிரிக்கப்படவில்லை.
பசில் இராசபக்சே அம்பாந்தோட்டை தேர்தல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இம்முறை அவர் கம்பகா தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு 425000 அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அப்படி அவரால் வெற்றிபெற முடியுமென்றால் யாழ்ப்பாண மாவட்டத் தேர்தலில் மட்டும் ஒரு வேட்பாளர் தனது தொகுதிக்கும் அப்பால் வாக்குகளை ஏன் பெறமுடியாது?
வேட்பாளர்கள் தோற்கவில்லை கட்சி தோற்றது என்பது விதண்டாவாதம். கட்சி இல்லாவிட்டால் கஜேந்திரகுமார், கஜேந்திரன், பத்மினிக்கு ஏற்பட்ட கெதிதான்
சிவஞானத்துக்கும் ஏற்பட்டிருக்கும். காங்கிரசில் கேட்டுத் தோற்ற போதும் காங்கிரஸ் வேட்பாளர்கள் தனக்கு போதியளவு விருப்பு வாக்குகளைப் போட விடாது தடுத்து விட்டனர் என்று பேசியிருந்ததை இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும்.
றுதியாக "ஆனால் 58 வருடங்கள் தமிழரசுக் கட்சி சார்பானவனாக இருந்த என்னை "இவன் காங்கிரஸ்காரன். தேர்தல் முடிந்ததும் காங்கிரஸுக்கே போய்விடுவான்' எனத் தமிழரசுக் கட்சியினரில் ஒரு குழுவினரே பிரசாரம் செய்தமை கவலைக்குரியது" என்கிறார். அப்படிப் பரப்புரை செய்திருக்கக் கூடாது என்பது சரிதான். ஆனால் உண்மை அதுதானே? 58 ஆண்டுகள் என்றால் 1952 தொடக்கம் அவர் தமிழரசுக் கட்சியில் இருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி அவர் இருக்கவில்லை. மாட்டின் காலத்தில் மாட்டினுக்கு ஆதரவாகவும் துரையப்பா காலத்தில் துரையப்பாவுக்கு ஆதரவாகவும் அவருக்குப் பின் காங்கிரஸ் கட்சியையும் அவர் ஆதரித்தார் என்பதுதான் வரலாறு.
இப்படி சந்தர்ப்பத்துக்குத் தக்கமாதிரி கட்சிவிட்டு கட்சி தாவும் ஒருவருக்கு மக்கள் எப்படி வாக்களிப்பார்கள்?
ஆடத் தெரியாத நர்த்தகி கூடம் கோணல் என்றாளாம். அது போல தேர்தலில் வென்றால் அது என் சொந்த செல்வாக்குக்குக் கிடைத்த வெற்றி தோற்றால் கட்சியின் தோல்வி என்று தட்டை சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு மாற்றிப் பாடுபவர்கள் பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரிககையோடு இருக்க வேண்டும்.
கட்சியில் நீண்ட காலம் எந்தக் கைமாறும் கருதாது உழைத்தவர்களுக்கே நியமனம் வழங்க வேண்டும். வேடந்தாங்கல் பறவைகளைத் தவிர்க்க வேண்டும்.
நக்கீரன்
யாழ் மாவட்டத்தில் தமிழ்க்கூட்டமைப்பின் தேர்தல் பின்னடைவுக்குக்காரணம் என்ன?
கடந்த
நாடாளுமன்றத்
தேர்தலில்
யாழ்.மாவட்டத்தில்
தமிழரசுக் கட்சி
சார்பில்
போட்டியிட்ட
சி.வி.கே.
சிவஞானம், கடந்த
24 ஆம் திகதி
நடைபெற்ற
தமிழரசுக்
கட்சியின் யாழ்.
மாவட் டக்
கிளையின்
பொதுச்சபைக்
கூட்டத்தில்
தேர்தல் பின்னடைவு
களுக்கான காரணத்தை
விளக்கி
உரையாற்றினார்.
அங்கு அவர்
தெரிவித்த
கருத்துகளைத்
தொகுத்துத்
தருகின்றார் "குபேரன்.'
யாழ்.மாவட்டத்தைப்
பொறுத்தவரை
ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்த்
தேசியக்
கூட்டமைப்பின்
ஆதரவு
பெற்றிருந்த
பொன்சேகாவுக்குக்
கிடைத்த வாக்குகளை
விட, பொதுத்
தேர்தலில் தமிழ்க்
கூட்டமைப்புக்குக்
கிடைத்த வாக்குகள்
சுமார்
நாற்பதாயிரம்
குறைவாகும்.
மக்களின்
அக்கறையின்மை,
அதிருப்தி,
உட்கட்சிக்
குழப்பங்கள்
போன்றவை இதற்குக்
காரணமாக
இருக்கலாம்.
வேட்பாளர் தெரிவு முறையாக இடம்பெறவில்லை. மாவட்ட முறைத் தேர்தல் இது என்று கூறப்பட்டாலும் வேட்பாளர் தெரிவு அதைச் சரியாகப் பிரதிபலிக்கவில்லை.
நான் நல்லூர்த் தொகுதியின் நிரந்தரக் குடியிருப்பாளன். முன்னரும் இரண்டு தேர்தல்களில் போட்டியிட்டிருக்கின்றேன். இத் தேர்தலில் என்னை விட நல்லூர்த் தொகுதியிலிருந்தே மேலும் ஐந்து வேட்பாளர்களைக் கூட்டமைப்பு தேர்தல் களத்தில் நிறுத்தியிருந்தது. இது, என்னை மிகவும் பாதித்தது. இவர்கள் வேறு தொகுதிகளைக் கவனிப்பார்கள் என்று கூறப்பட்டபோதும், நல்லூர்த் தொகுதி வாக்குகளையே இவர்கள் எல்லோரும் பிரித்தனர்.
வேட்பாளர் தெரிவின்போது யாழ்ப்பாணத் தொகுதிக்கு ஒருவரும், கோப்பாய்த் தொகுதிக்கு இருவரும், நல்லூர்த் தொகுதிக்கு அறுவருமாக மூன்று அடுத்தடுத்த தொகுதிகளை வசிப்பிடமாகக் கொண்ட ஒன்பது பேர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். ஏனைய எட்டுத் தொகுதியிலிருந்தும் மூவர் நியமிக்கப்பட்டனர்.
வேட்பாளர்
தெரிவின்போது
ஏனைய பகுதிகளுக்கு
அதிக கவனமும்,
இடமும்
அளிக்கப்பட்டிருந்தால்
அந்தந்தப்
பகுதிகளில்
இருந்து அதிக
வாக்குகளை இன்னும்
திரட்டியிருக்கக்கூடிய
வாய்ப்புக்
கிட்டியிருக்கும்.
தேர்தலில் வேட்பாளர்கள் தோற்கவில்லை. கட்சியே தோற்றது.
நேரடியாக
ஐந்துபேரை இந்தப்
பட்டியலில்
தமிழரசுக் கட்சி
நிறுத்தியது.
ஆனால் ஒரு இடத்தை
மட்டுமே தமிழரசுக்
கட்சியால் பெற
முடிந்தது.
கடந்த தடவை பெற்றிருந்த எட்டு இடங்களுடன் களமிறங்கிய கூட்டமைப்பினால் இம்முறை ஐந்து இடங்களையே தக்கவைக்க முடிந்தது.
கடந்த தடவை போல கூட்டமைப்பு இம்முறை எட்டு ஆசனங்களைப் பெற்றிருந்தால் எட்டு அங்கத்தவர்கள் நாடாளுமன்றுக்குத் தெரிவாகியிருப்பர். கூட்டமைப்பு ஐந்து இடங்களைப் பெற்றபடியால் ஐவர் தெரிவாகினர். எனவே, தோல்வி கூட்டமைப்புக்கே. தவிர, தெரிவாகாத வேட்பாளர்களுக்கு அல்ல.
தேர்தல் பிரசாரங்களில் உட்கட்சிப் போட்டி மக்களை வெறுப்படையவும் வாக்களிக்காமல் ஒதுங்கவும் வழி வகுத்தது என்பதை மறுப்பதற்கில்லை.எனக்கு வாக்களிக்க வேண்டாம் என எமது இரு வேட்பாளர்களே கூறி வந்தமை எனக்குத் தெரியும். சில வேட்பாளர்கள் தமது இலக்கத்துக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்று பிரசாரம் செய்தனர். வேறு சிலரோ தமக்கு மட்டும் வாக்களித்து ஏனைய எவருக்கும் வாக்களிக்கக்கூடாது எனவும் பிரசாரம் செய்தார்கள்.
என்னைத் தமிழ்க் காங்கிரஸ்காரர் என சிலர் விமர்சித்தனர். "தமிழரசுக் கட்சிக்காரன் தேர்தல் ரிக்கெட்டுக்காகத் தமிழ்க் காங்கிரஸுக்கு வந்தவன்' என்று கூறித் திரிந்தனர். கட்சி ரீதியாகப் பார்த்தால் இதில் சற்று நியாயம் இருக்கலாம்.
ஆனால் 58
வருடங்கள்
தமிழரசுக் கட்சி
சார்பானவனாக
இருந்த என்னை "இவன்
காங்கிரஸ்காரன்.
தேர்தல்
முடிந்ததும்
காங்கிரஸுக்கே
போய்விடுவான்'
எனத் தமிழரசுக்
கட்சியினரில் ஒரு
குழுவினரே
பிரசாரம் செய்தமை
கவலைக்குரியது.
"விடுதலைப்புலிகள்தான்
ஏகப் பிரதிநிதிகள்'
எனக் கூறி தமது
விசுவாசத்தைக்
காட்டிக்கொண்டோர்
இப்போது புலி
எதிர்ப்புக்
கருத்தைப்
பிரதிபலித்தமையும்
கவலைக்குரியது.
ஆனால் நான், 1982 87 இல் எங்கே நின்றேனோ இப்போதும் அக்கருத்திலேயே நிற்கிறேன்.
இயல்பு வாழ்க்கை
திரும்பிய பின்பே
அரசியல் தீர்வு
எனப் பேசி அரசியல்
தீர்வு
நடவடிக்கைகளை
இழுத்தடிக்கக்
கூடாது. இயல்பு
நிலைக்குத்
திரும்பலும்,
அரசியல் தீர்வு
நடவடிக்கைகளும்
சமாந்தரமாக
முன்னெடுக்கப்பட
வேண்டும். அரசியல்
தீர்வு
எட்டப்படாமல்
இயல்பு நிலையை
நாம் துரிதமாக
உருவாக்கமுடியாது
என்பதையும் நாம்
மறந்துவிடக்
கூடாது.
எனக்கு மட்டும் அப்படி எவ்வாறு விருப்பு வாக்குகளின் எண்ணிக்கை கனகச்சிதமாக மூன்று தொடர் பூச்சியங்களைக் கொண்டதாக ஏழாயிரம் என வரும் என்பது கவனிக்கத்தக்கது. நான் ஒரு கணக்காளன். நிர்வாகி. இதன் பின்புலம் குறித்து எனக்குத் தெரியும். மக்களுக்கும் தெரியவரும்.
பேராசிரியர் சிற்றம்பலம்
இதேசமயம், இக்கூட்டத்தில் உரையாற்றிய பேராசிரியர் சிற்றம்பலமும், வேட்பாளர் தெரிவு தொடர்பாக சிவஞானம் தெரிவித்த கருத்தை அங்கு வழிமொழிந்து உரையாற்றினார்.
"வேட்பாளர்
தெரிவுமுறை
திருப்தி தரவில்லை.
அது நியாயமாக
இடம்பெறவில்லை.
கொழும்பில்
எடுக்கப்பட்ட
தீர்மானத்தை இங்கு
திணித்தார்கள்.
அதுவும்
பின்னடைவுக்குப்
பிரதான காரணம்.''
என்றார்
சிற்றம்பலம்.
----- Original Message -----
From: ram
Sent: Tuesday, May 04, 2010 7:36 PM
Subject: இலங்கை பாராளுமன்றை அதிர வைத்த கன்னி உரை
எழுத்து வடிவம்
கெளரவ சபாநாயகர் அவர்களே மதிப்பிற்குரிய சக உறுப்பினர்களே என்னை தங்கள் பிரதிநிதியாக உங்கள் முன் அனுப்பி இருக்கும் எமது மக்களின் சார்பிலும் எனது சார்பிலும் எனது வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் முதலில் உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இறந்துபோன உறவுகளின் எலும்புத்துண்டங்கள் என் பாதங்களை முத்தமிட அழிந்துபோன எம் தேசத்தின் சாம்பல் மேட்டிலிருந்து எனது மக்களின் நிரந்தர பூர்வீக வாழ்வியல் உரிமைக்கான அங்கீகாரம் மக்களின் அங்கீகாரத்தோடு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு தமது கெளரவமிக்க உயிரினும் மேலான உரிமைக்காக காலமெல்லாம் போராடி தவமிருக்கும் தமிழ்பேசும் மக்களிடமிருந்து வருகின்றேன்.
இரண்டாவது உலக யுத்தம் முடிவடையும் தறுவாயில் முற்றுமுழுதாக தோற்கடிக்கப்பட்டு சரணடையும் நிலையிலிருந்த போதிலும் அணுகுண்டு வீச்சுக்குட்படுத்தப்பட்டு இரு பெரும் நகரங்களையும் இரண்டு லட்சம் மக்களையும் இழந்து இன்றுவரை கதிர்வீச்சு தாக்கத்தில் இருந்து முழுமையாக விடுபடாத போதிலும் மீண்டுமொரு பொருளாதார வல்லரசாக இடிச்சு பெருப்பித்திருக்கும் இரசாயண தேசத்தின் அன்பளிப்பான இக்கட்டிடத்தொகுதியில் இருந்து என் கன்னி உரையை எதிர்காலம் பற்றிய உயர்வான நம்பிகையுடன் ஆரம்பிப்பதில் பெருமையடைகின்றேன்.
தோற்கடிக்கப்பட்டவர்கள் எல்லோரும் தோற்றுப்போனவர்கள் அல்லர், அழிக்கப்பட்டவர்கள் எல்லோரும் அழிந்துபோனவர்களும் அல்லர் என்பதற்கு உலக வரலாற்றில் ஏராளமான உதாரணங்கள் உண்டு.
துருக்கிய பேரரசாலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளாலும் காலத்திற்கு காலம் அழிக்கப்பட்டு வெறும் கற்குவியலாக்கப்பட்ட உரோமானிய தேசம். அந்தக் கற்களையே தம் மூலதனமாக்கி சீமெந்து உற்பத்தியில் பெரும் சாதனையீட்டி இன்று தலை நிமிர்ந்து நிற்கின்றது. அந்தக் கற்களில் எழுதப்பட்ட சோக காவியங்கள் இன்று வசந்த கீதங்களாக மாற்றப்பட்டுவிட்டன.
ஒரு தேசமோ ஒரு இனமோ இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டு பேரழிவுகளுக்கு முகங்கொடுக்கும்போது மீள் எழுவதற்கு இன்னுமொரு பாதை உண்டு என்பதை ஜப்பானியர்களும் உரோமானியர்கள் இன்று முழு உலகத்திற்கும் நிரூபித்துவிட்டனர். நாம் பயங்கரவாதிகளாக பட்டம் சூட்டப்பட்டோம்.
உலக வல்லரசுகளும் பிராந்திய வல்லரசும் எமது இராணுவ பலத்தையும் எமது சந்ததியையும் அழிப்பதற்கு உரிய நியாயப்பாட்டை எம்மை பயங்கரவாத பட்டியலில் சேர்த்துக்கொண்டதன் மூலம் ஏற்படுத்திக்கொண்டன. விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் தமிழ்மக்களுக்கெதிராக ஒரு பெரும் யுத்தம் கட்டவிழ்த்து விடப்பட்டது.
பல்லாயிரம் தமிழ்மக்கள் கொல்லப்பட்டனர். இன்னும் பலர் ஆயிரமவர் ஊனமாக்கப்பட்டனர், காணாமல் போனோரின் தொகை இன்னமும் கணக்கிடப்படவில்லை, பலகோடி பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டன. சூறையாடப்பட்டுள்ளன. எல்லாவற்றையும் இழந்து அகதிகளாக வெறுங்கைகளுடன் முட்கம்பி வேலிகளுக்குள் முடக்கப்பட்டோர் தொகை லட்சங்களாக உயர்ந்தது.
இப்பேரழிவின் பின்னால், இலங்கை அரசுக்கு உலக வல்லரசுகளும் பிராந்திய வல்லரசும் மறைமுகமாகவும் நேரடியாகவும் பெரும்பங்களிப்பை வழங்கின. இன்று இப்போரின் எம்மீது போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டதாகவும், மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகவும் குற்றம் சுமத்தி சிங்கள தேசத்தின் கழுத்தை நெரிக்க, வல்லரசுகள் தங்கள் கரங்களை நீட்டுகின்றன. அதாவது எங்களை அழிக்க உங்களுக்கு தோள்கொடுத்தவர்கள் இன்று உங்களை அடிமைப்படுத்த எங்களைப் பாவிக்கின்றனர்.
மதிப்பிற்குரிய எங்கள் சகோதர்களே எங்களுக்கெதிராக உங்களையும் உங்களுக்கெதிராக எங்களையும் பாவித்து எங்கள் எல்லோரையும் அடிமைகொள்ள முயலும் இவர்களின் வழியில் நாம் தொடர்ந்து விழத்தான் வேண்டுமா?
நாம் ஒரு தேசத்தின் இரு தேசிய இனங்களாக அங்கீகரிக்கப்பட்டதுண்டு. நாங்கள் எங்களையும், எங்கள் தேசத்தையும் தற்காத்துக்கொள்ள வேண்டாமா? இரு இனங்களுக்குமிடையேயான புரிந்துணர்வும் நல்லடக்கமும் வேறு இப்போது அவசியம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நமது இராணுவ வலிமை அழிக்கப்பட்ட பின்பு, எமது உரிமைகளுக்கான போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்பு, எங்கள் பலவீனமான நிலைமையை மீறி மேலாதிக்கம் செலுத்துவதன் மூலம் ஒரு ஐக்கியத்தை உருவாக்கிவிட முடியும் என்ற ஒரு தவறான பார்வை உங்கள் மீது திணிக்கப்பட்டிருக்கலாம்.
இத்தகையதோர் பார்வையும் அதன் வேர்களில் இருந்து எழுந்த சிந்தனைப்போக்குமே நமது அறுபது வருட போராட்டத்திற்கும் முப்பது வருட ஆயுதப்போராட்டத்திற்கும் அடிப்படை என்ற உண்மையை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டிய காலமிது. மீண்டும் குருதி சிந்தும் நாட்களை உருவாக்கும் காரணிகளை தயவுசெய்து உங்கள் எண்ணங்களிலிருந்து தூக்கி தூர வீசிவிடுங்கள். அடக்குபவர்களுக்கும் அடக்கப்படுபவர்களுக்கும் இடையே ஐக்கியம் நிலவியதாக வரலாறு இல்லை. நிம்மதி கிடைத்ததாக உதாரணங்கள் இல்லை. நாங்கள் நாங்களாகவும் நீங்கள் நீங்களாகவும் கரங்கோத்து நின்று எங்கள் தேசத்தைக் கட்டியெழுப்புவோம்.
எங்கள் கழுத்தை உங்கள் கரங்கள் நெரிக்கவேண்டாம். உங்கள் கரங்களை எங்கள் பற்கள் காயப்படுத்த வேண்டாம். உங்களுக்கென ஒரு பாரம்பரிய வாழ் நிலம், மொழி, பொருளாதாரம், தனித்துவமான கலாச்சாரம் உண்டு. எமக்கும் இவை அனைத்தும் உண்டு என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.
அன்புக்குரியவர்களே இலங்கை மக்களாகிய நாங்களும் நீங்களும் பேரழிவுகளைச் சந்தித்த அதேவேளையில் அந்நிய ஆயுத வியாபாரிகளும் தரகர்களும் கோடிகோடியாக இலாபம் வைத்து எம்மைக் கொள்ளையடித்தார்கள். இதுமட்டுமா போரின்போதும் அதன்பின்பும் எமக்குப் பலவித நெருக்கடிகளைக் கொடுத்து எமது மூலவளங்களையும் மனித உழைப்பையும் கொள்ளையிடுகின்றார்கள்.
புல்மோட்டையில் இல்மனைட் வளமும் கொள்ளையடிக்கப்படுகின்றது. வடக்கின் சுண்ணக்கல் வளமும் எண்ணெய் வளமும் இந்தியாவால் அபகரிக்கப்பட திட்டம் தீட்டப்பட்டுவிட்டன. இன்னொருபுறம் எண்ணெய் வளத்தைக் கொள்ளையிட ரஷ்யா ஒப்பந்தம் எழுதிவிட்டது. சேது சமுத்திர திட்ட மூலம் எமது கடல்வாழ் உயிரினங்களின் வளம் அழிக்கப்படுகின்றது. அமெரிக்காவின் கரங்களுக்கு போய்விட்டது. சுதந்திர வர்த்தக வலயம் அந்நிய முதலீடுகளைக் கவர்தல் என்ற பெயரில் எமது மக்களின் மனித உழைப்பு மலிவான விலையில் கொள்ளையிடப்படுகின்றது.
இலங்கை "பெண்களின் சொர்க்கம்" என்ற விளம்பரம் செய்யப்படும் அளவிற்கு உல்லாசப் பயணத்துறை என்ற பெயரில் கலாச்சார பாரம்பரியமூட்டல்களால் பெண்கள் கேவலப்படுத்தப்படுகின்றனர். பதினான்காயிரத்திற்கு மேற்பட்ட சிறுவர் சிறுமியர் வெளிநாட்டவரின் பாலிய வக்கிரத்திற்கு பலியாகி எதிர்காலத்தை இழக்கின்றார்கள்.
ஆம், எங்கள் மூலவளங்களும் மனித உழைப்பும் கொள்ளையிடப்பட்டு எமது தேசம் ஒட்டாண்டி நிலைக்கு தள்ளப்படுகின்றது. இப்பேராபத்தில் இருந்து எம்மை நாம் மீட்க நாம் உரிமை கொண்டு ஐக்கியப்பட்டு எழுச்சிபெற வேண்டும். இந்நாட்டில் பெரும்பான்மை சிறுபான்மை என எதுவுமில்லை என்பது வெறும் வெற்றுக்கோசமாக இருந்துவிடக்கூடாது. இனியும் அடக்குபவர்களோ அடக்கபடுபவர்களோ இல்லை என மிளிருபடவேண்டும் என்பதே நமது அவாவாகும்.
நிற்க, இப்படியான ஒரு புறச்சூழலில் இப்போரின் கொடுமைகளையும் அதன் பின்னரான காலத்தில் கொடுமைகளையும் அனுபவித்துக்கொண்டிருக்கும் கிளிநொச்சி முல்லத்தீவு மாவட்ட மக்களின் இடர்களை கவனித்து களைவதில் முக்கிய பணி எனக்கு அதிகமாக உள்ளதாகவே நான் உணர்கின்றேன். நாம் போருக்கு நேரடியாகவே முகங்கொடுத்தவர்கள். இந்த போர் எங்கள் மீது விமானங்கள் குண்டுகளை வீசியது, எறிகணைகள் எங்கள் உடல்களை துளைத்தன. துப்பாக்கி வேட்டுக்கள் எங்களை துளை போட்டன. மரணம் எங்களை விரட்ட விரட்ட இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து ஓடினோம், போகுமிடம் தெரியாமலேயே வெட்டவெளிகளில் வீதியோரங்களிலும் கூடார வாழ்க்கையை ஏற்றோம். மீண்டும் மீண்டும் போர் எங்களை துரத்திய போதும் ஓடினோம். இருப்பினும் மரணங்களைத் தவிர்க்க முடியவில்லை. உடலுறுப்புக்கள் இழப்பதை தவிர்க்க முடியவில்லை. இறந்த உடல்களை எடுத்து புதைக்கவும் வழியின்றி ஓடினோம். உணவில்லை குடிக்க நீரில்லை இயற்கை கடன்களை கழிக்க இடமில்லை, அடுத்த நிமிட உயிர்வாழ்வு பற்றிய நம்பிக்கைக்கு இடமில்லை, முள்ளிவாய்க்காலுக்குள் மூன்றரை லட்சத்திற்கு மேற்பட்டோர் முடக்கப்பட்டோம்.
உலகின் நற்பண்புகளுக்கும் மனிதாபிமானமாக காட்டப்பட்ட நடவடிக்கைகள் எங்களை மரணக்குழிகளுக்குள் தள்ளின. இறந்தவர் போக எஞ்சியோர் நந்திக்கடல் தாண்டினோம். வவுனியாவில் அகதிமுகாமுக்குள் எங்கள் வாழ்வு முடக்கப்பட்டது. உணவுக்களஞ்சியமான வன்னிமண்ணில் உற்பத்தியைப் பெருக்கி மற்றவருக்கு உண்டி கொடுத்த நாம் ஒருபிடி சோற்றுக்கு கையேந்தி வரிசையில் நின்றோம். இன்று எம்மில் ஒரு பகுதியினர், ஆறு தகரங்களுடனும் ஆறுமாத நிவாரண பொருட்களுடனும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டோம். ஏனையோர் இன்னும் முகாம்களில். போர் முடிந்து ஓர் வருடம் ஓடிப்போய்விட்டது. எம் துயரங்கள் முடிய இன்னும் எத்தனை வருடங்கள் போகும் என்பது எமக்குள்ள கேள்வி. போராளிகள் என்ற பெயரில் இன்னமும் பல ஆயிரமவர் தடுப்புமுகாம் அவலங்களுக்குள் தவிக்கின்றனர். பெற்றோர்கள் தம் பிள்ளைகளைப் பார்த்துவிட மணிக்கணக்காக மழையிலும் வெயிலிலும் காத்துநிற்கின்றனர். இன்னும் எத்தனையோ பெண்களும் பிள்ளைகளும் எங்கையென்று அறியமுடியாது உறவினர் அலைந்து திரிகின்றனர் . ஒவ்வொரு நாளும் காயப்பட்டு சிகிச்சைக்காக உலங்குவானூர்தியில் ஏற்றப்பட்ட எத்தனையோ பேரை தேடி விளம்பரங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
இச்சபையில் பெருமைக்குரிய உறுப்பினர்களே ஒரு ஜனநாயக தேசத்தில் இதுதான் எங்கள் வாழ்வு. இதிலிருந்து நாம் மீளெழ வேண்டும். அந்நிய தேசங்கள் நமது நாட்டின் மூலவளங்களையும் மனித வளங்களையும் கொள்ளையடிப்பதுடன் எமது இறைமையை நிறைவேற்றுவதுடன் பாதுகாக்கவும் நாம் உங்களுடன் ஒன்றிணைய காத்திருக்கின்றோம். ஆனால் நாம் மனிதர்களாக வாழும்போது மட்டும்தான் அது சாத்தியப்படும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நாம் எல்லோரும் இந்நாட்டு மக்களென மாண்புமிகு ஜனாதிபதி அவர்களின் வார்த்தைகளை நேசிக்க முயலுங்கள். உரிமை பறிக்கப்பட்டவர்களும் உரிமை பறிப்பவர்களும் ஒரே சகோதரர்களாக எப்படி வாழமுடியும்? எங்கள் சகோதர்களே மக்கள் சார்பில் மீண்டும் நான் உங்களைக் கேட்பது, மீண்டும் எங்கள் வாழ்வை ஆரம்பிக்க எமக்கு வழிவிடுங்கள். உருளும் உலகப்பந்தின் இந்த அழகிய மாங்கனித் தீவிலே கிறிஸ்துவுக்கு முற்பட்ட கால வரலாற்று சிந்தனையை கைவிட்டு, இருபத்தோராம் நூற்றாண்டுக்குரிய நவீன சிந்த்னையின்படி இனப்பிரச்சினையை அணுகவேண்டும். சிங்கள மக்களும் தமிழ்பேசும் மக்களும் இலங்கைத் தீவின் இணை உரிமையாளர்களும் இணைப் பங்காளர்களும் என்ற மனபாங்குடன் ஒரு புதிய அரசியலை அணுக அரசாங்கம் தயாராக வேண்டும்.
தற்போது சிங்கள மக்களிடம் தமிழரை வெற்றிகொண்ட மனப்பாங்கும், தமிழரிடம் வேதனையும் வெறுப்பும் நிறைந்த நிலையும் காணப்படுகின்றது. ஒரே நாடு ஒரே மக்கள் என்று சொல்லிக்கொண்டே பூநகரி வெற்றி விழாவையும், கிளிநொச்சி வெற்றி விழாவையும், முள்ளிவாய்க்கால் வெற்றி விழாவையும் கொண்டாடிய தினமும், இனிவரும் நாட்களில் மே மாதம் 12ம் திகதி முதல் 18ம் திகதிவரை கொண்டாடப்படவுள்ள இராணுவ வெற்றிவிழாவும், தமிழர்களின் மனங்களை எப்படி உடைத்து சிதறிடிக்கப்போகின்றது என்பதை சிந்தியுங்கள். இராணுவத்தால் தீவு நிரம்பி வழிந்து ஒன்றுபட்டது போல் காணப்பட்டாலும், மனத்தால் தீவு இரண்டுபட்டே இருக்கின்றது. புத்தபகவான் பரிநிர்வாணம் அடைவதற்காக தவமிருந்தார் என்ற மகிமை சிங்கள மக்களுக்கு தெரியும்.
சுதந்திர இலங்கையில் இதுவரை இரண்டரை லட்சத்திற்கும் மேலான உயிர்களை இழந்து தமிழ்மக்கள் தமது உரிமைக்காக தவமிருக்கின்றார்கள் என்ற உண்மையை சிங்கள சகோதரர்களும் இந்த உலகமும் புரியும் நாள் வந்திருக்கின்றது. தன் சொந்த சகோதர இனத்துடன் அதிகாரங்களைப் பங்கிட்டுக் கொள்ள தயாரில்லாமல், அந்நிய நாடுகளிடம் கையேந்தி தனது சொந்த தமிழ் மக்களுக்கெதிரான அரசியலை வலைவீசி வரும் அரசாங்கங்கள் நடத்தியதன் விளைவாய் இலங்கைத் தீவை அந்நிய அரசுகளின் காலடிக்குள் சிக்குண்டிருப்பதையும் ஆட்சியாளர்கள் உணர இன்னும் எவ்வளவு காலம் எடுக்குமோ தெரியாது.
ஒரு இனத்தை எந்த இனம் ஒடுக்குகின்றதோ அந்த இனமும் அமைதியாக இருக்க முடியாது அந்த நாடும் சுபீட்சம் அடைய முடியாது. அத்துடன் எம் ஓரினத்தை ஒடுக்க எடுத்த நடிவடிக்கைகளின் விளைவால் அந்நிய தேசங்களிடம் அடிமைப்பட்டு போகவும் நேரும். சுதந்திரமும் சுபீட்சமும் நிறைந்த இலங்கையை கட்டியெழுப்ப வேண்டுமென்றால், அது ஏனைய இனங்களின் தனித்துவ உரிமைகளை அங்கீகரிப்பதிலும் அவர்களுடன் அதிகாரங்களை பங்கிட்டுக்கொள்வதிலுமே அதனை ஆரம்பிக்க வேண்டும். அதற்கான துணிச்சலையும், தூரப்பார்வையையும், இன்றைய அரசாங்கம் முன்னெடுக்குமா என்பதே இன்றைய கேள்வியாகும்.
முதிர்ந்த அரசியல் அனுபவமிக்க சம்பந்தர் ஐயா தலைமையில் இதற்கான வாய்ப்பை அளிக்க எமது கட்சி தயாராக உள்ளது. இத்தகைய அரிய வரலாற்று வாய்ப்பை பயன்படுத்தி தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய நல்ல தீர்வை ஏற்படுத்தி, புதிய இலங்கையை கட்டியெழுப்ப அரசாங்கம் தயாராக வேண்டும். இதனை தவறவிட்டால், வரலாறு தான் விரும்பும் இன்னொரு திசைக்கு தீர்வை இட்டுச் செல்லும் என்பது திண்ணம்.
சுனாமியாலும் யுத்தத்தாலும் அழிந்து சின்னாபின்னப்பட்டிருக்கும் தமிழ்பேசும் மக்களின் மனங்களைப் புரிந்து அவர்களின் துன்பங்களைப் பகிர்ந்து அவர்களின் தனித்துவமான உரிமைகளை புரிந்து அதற்கேற்ப நியாய பூர்வமானதும் நீதியானதுமான தீர்வை காணவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு. நாம் இரு சுதந்திரமான தேசிய இனங்களாக ஒரு நாட்டின் மக்களாக ஒன்றினைந்து நம் தேசத்தைக் கட்டியெழுப்புவோம் என்ற பிரகடனத்தை மனமுவந்து நாம் அனைவரும் நினைப்போம் என்று கூறி என் கன்னி உரையை நிறைவு செய்கின்றேன்.
உங்கள் கருத்துக்களை அனுப்ப
மின்னஞ்சல் - shritharan08@hotmail.com
திரு. சிறிதரன், நா.உ.
முதலில் உங்கள்
வெற்றிக்கு எனது
வாழ்த்துக்கள்.
வெறிச்சோடிப்
போய்க் கிடக்கும்
கிளிநொச்சித்
தொகுதியில்
நின்று வெற்றி
பெற்றது
அசுர சாதனை.
உங்களது கன்னிப் பேச்சு வித்தியாசமாக இருக்கிறது. ஆனால் இதற்கு முன்னரும் எங்களது தலைவர்கள் இதே பாணியில் பேசியிருக்கிறார்கள். அவையெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காகப் போய்விட்டன.
உங்கள் பேச்சில் கீழ்க்கண்ட பந்தி எங்கோ இடிக்கிற மாதிரி இருக்கிறது.
" இப்பேரழிவின் பின்னால், இலங்கை அரசுக்கு உலக வல்லரசுகளும் பிராந்திய வல்லரசும் மறைமுகமாகவும் நேரடியாகவும் பெரும்பங்களிப்பை வழங்கின. இன்று இப்போரின் எம்மீது போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டதாகவும், மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகவும் குற்றம் சுமத்தி சிங்கள தேசத்தின் கழுத்தை நெரிக்க, வல்லரசுகள் தங்கள் கரங்களை நீட்டுகின்றன. அதாவது எங்களை அழிக்க உங்களுக்கு தோள்கொடுத்தவர்கள் இன்று உங்களை அடிமைப்படுத்த எங்களைப் பாவிக்கின்றனர். "
அப்படியென்றால் சிங்களத் தரப்பினால் போர்க்குற்றங்கள் இழைக்கப்படவில்லையா? மனிதவுரிமை மீறல்கள் இடம்பெறவில்லையா? மேற்குலக நாடுகள் சிங்கள தேசத்தின் மீது சாட்டும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லையா? உங்களது பேச்சை மேற்கோள் காட்டி சிங்கள அரசு மேற்குலக நாடுகளுக்கு எதிராகப் பரப்புரை செய்தால் நான் வியப்படைய மாட்டேன்.
சிங்கள அரசுகள் - அது நீலமாக இருந்தாலும் சரி பச்சையாக இருந்தாலும் சரி - முழு இலங்கையும் சிங்களவர்களுக்கே சொந்தம் என்ற மகாவம்ச மனப்பான்மையோடுதான் செயல்படுகின்றன. அதன் வெளிப்பாடுதான் திட்ட மிட்ட சிங்களக் குடியேற்றம்.
கிழக்கில் தமிழ்மக்கள் சிறுபான்மையாக்கப் பட்டுவிட்டனர். இப்போது சிங்கள ஆட்சியாளர்களது கவனம் வடக்கே திரும்பியுள்ளது.
கிளிநொச்சி நோக்கி மணலாறு மிக விரைவில் நகரத் தொடங்கும். வன்னி மக்களில் கணிசமான மக்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தந்திரமாக அனுப்பப் பட்டுள்ளார்கள். வன்னியில் சில கிராமங்களில் தமிழர்கள் மீள் குடியேற்றப்பட்டாலும் வட்டக்கச்சி போன்ற இடங்களில் இன்னும் அவர்கள் மீள் குடியேற்றப்படவில்லை.
வடக்கையும் சிங்கள மயப்படுத்தி தமிழர்களது தாயகக் கோட்பாட்டை சிதறடிப்பதே சிங்கள அரசின் நோக்காகும்.
அண்மையில் சிங்கள அறிவுப் பிழைப்பாளர்கள் ஒரு அறிக்கை விட்டிருந்தார்கள். வடக்கில் சிங்களவர்களைக் குடியேற்றி வடக்கு சிங்கள மயப்படுத்தப்பட வேண்டும் என்று அதில் கேட்டிருந்தார்கள்.
இதன் வெளிப்பாடுதான் யாழ்ப்பாணத்தில் தென்னிலங்கை வணிக குழுமங்கள் போட்டிபோட்டுக் கொண்டு காணிகளை வாங்குகிறார்கள். சிங்களவர்கள் தமிழர்களது பெயரில் காணிகள் வாங்குவதாகவும் செய்திகள் வருகின்றன.
இராணுவ பலத்தை முற்றாக இழந்த நாங்கள் இப்போது அரசியல் மற்றும் இராசதந்திர பலத்தையே நம்பி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியா உட்பட அனைத்துலக நாடுகளின் உதவியோடு சிங்களக் குடியேற்றத்தைத் தடுத்து நிறுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டமிட்டுச் செயல்பட வேண்டும். வடக்கிலும் கிழக்கிலும் முகாம்களிலும் தெருவோரங்களிலும் வாழும் எம்மக்கள் அவர்களது வீடு வாசல்களில் மீள் குடியமர்த்தப்பட வேண்டும்.
சம்பூர் அனல் மின்நிலையத் திட்டத்தை எப்பாடு பட்டாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடுத்து நிறுத்த வேண்டும்.
அன்புடன்
நக்கீரன்
கனடா
Thus, the official April 8 polls results announced by the Department of Elections gave the UPFA a landslide victory - 144 in the 225-seat Parliament. That included 17 seats on the National List. The UPFA was only six short of a two-thirds majority though the alliance seemed in no mighty hurry for it. Two more MPs peeled away from the UNP on Friday to remain as independents. With their support, which was not in doubt, the number needed was a mere four. If one were to go by the official figures of a less than transparent Department of Elections on the percentage of votes cast, the April 8 poll did not have a low turnout. It says 61.26 of the electors cast their votes. If one is to go by these figures, the UPFA had polled 60.33 per cent of the votes cast.
The UPFA's victory is all the more significant since it has won 19 of the 22 districts or 127 of the 160 electorates. For the United National Party (UNP), it was the worst defeat in history. It won just 51 from the 196 seats for which polls were held. Giving it a semblance of respectability was the nine National List slots bringing the total number to 60 seats. In 1989, just two months after the presidential elections, the Sri Lanka Freedom Party (SLFP), came up with the poorest performance winning 58 seats and receiving nine more on the National List bringing the total to 67. The UNP, the architects of the proportional representation system of voting, has now created a new record. The UNP polled only 29.34 percent of the votes cast. One analyst said if the voting were to be on 'first-past-the-post basis,' the UNP would have received only a paltry six seats.
Coming third was the ITAK or the Tamil National Alliance with 14 seats including one from the National List. The TNA was able to secure the once war-torn Wanni, Jaffna and the eastern Batticaloa districts. It had secured 2.90 percent of the countrywide vote.
The Democratic National Alliance (DNA) named Anura Kumara Dissanayake and Tiran Alles on its National List. The TNA's nomine was attorney at law M.A. Sumanthiran.
Though D.M. Jayaratne, was named Prime Minister, the Sunday Times learns that he will hold office only until November, this year. In that month, President Mahinda Rajapaksa, will take his oaths for his second term as President. Thereafter, Basil Rajapaksa, is to take over as the new Prime Minister. The trusted chain of loyalists will be thus consolidated. The second and third top most positions in the political leadership, the Prime Minister and Speaker, will be held by two most loyal brothers of President Rajapaksa.
Excuses are the
tools with which
persons with no
purpose in view
build for
themselves great
monuments of
nothing.”
— Steven
Grayhm
“There’s a
difference
between interest
and commitment.
When you’re
interested in
doing something,
you do it only
when
circumstances
permit. When
you’re committed
to something,
you accept no
excuses, only
results.” —
Anonymous
“A
state of war
only serves as
an excuse for
domestic
tyranny.” —
Aleksandr
Solzhenitsyn
Your Excellency,
You have asked for a mandate to make political and economic changes to this country to address the consequences of three decades of deadly conflict. At earlier times, you have also promised to address legitimate grievances of the Tamils and other “minorities” through improving existing constitutional provisions. You have made public commitments to alleviate the suffering of IDPs still living in camps and with host families. You are duty-bound to dismantle the structures of war such as HSZs and allow ordinary citizens in these areas to get back to their normal lives. You are honour-bound and legally responsible to provide compensation and alternatives to those who suffered due to the conflict.
Now that you and your political alliance have achieved this so-called mandate in two consecutive elections, it is time to keep your promises. You have more power than any other democratically elected head of state in the world. No one will oppose you in any serious way, within or outside parliament. The independent media has been effectively silenced. Civil society organisations that don’t toe your party line are targets of your acolytes who act with complete impunity and without censure from you. Individual dissenters are an endangered species, it seems. In marked contrast those who sing your praises are legion, but this means only that your power and the prospect of favours are irresistible for many. Be assured that the very day you relinquish your control of the country, they will realign themselves to the new dispensation.
Your power is now as absolute as it can ever be. The armed forces are controlled by loyalists, some you have handpicked. The police and other systems of law and order do your bidding, and, arguably, only your bidding. Key ministries, institutions and administrative positions are safely in the hands of your siblings, relatives and close associates. As a bonus, you have the main opposition party leader whose every action demonstrates that he is your strongest supporter and chief ally. Members of parliament on all sides will do anything if the price is right and since you are in a position to offer lucre and leverage, the two-thirds majority is yours for the taking. Anyone you perceive as a threat is behind bars, in hiding or silenced. You make up the rules, you determine to whom the rules apply and who is exempt. Your every platitude is taken up as the quintessence of genius by sycophants of every stripe. In short, you can do no wrong now.
சிறிலங்காவின் இராணுவம், கடற்படை, விமானப்படை முற்று முழுதாக மகிந்த இராசபக்சேயின் அடிவருடிகளால் நிரப்பப்பட்டுள்ளனர். முன்னைய இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் விசுவாசிகள் என்று கருதப்பட்டவர்கள் அல்லது அய்யப்பட்டவர்கள் முப்படைகளிலில் இருந்தும் களையெடுக்கப்பட்டு விட்டனர்.
மகிந்த இராசபக்சேக்கு இன்னொரு அதிட்டமும் அடித்திருக்கிறது. முன் எப்பொழுதும் இல்லாதவாறு ஒரு பலவீனமான எதிர்க்கட்சியும் எதிர்க்கட்சித் தலைவரும் வந்து வாய்த்திருக்கிறார். அறுபது உறுப்பினர்களைக் கொண்ட அய்க்கிய தேசியக் கட்சி ஏற்கனவே இரண்டு உறுப்பினர்களை இழந்துள்ளது.
மகிந்த இராசபக்சேயின் அய்க்கிய மக்கள் சுதந்திர முன்னணி 144 இருக்கைகளைக் கைப்பற்றியுள்ளது. மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அதற்கு மேலும் நான்கு இருக்கைகளே தேவைப்படுகிறது. சென்ற கால வரலாற்றைச் சிறிது திரும்பிப் பார்த்தால் எதிர்க்கட்சி வரிசை உறுப்பினர்களில் இருந்து இந்த நான்கு உறுப்பினர்களை இழுப்பது கடினமாக இருக்காது.
புதிய அமைச்சரவையில் 37 அமைச்சர்களும் 39 துணை அமைச்சர்களும் இருக்கிறார்கள். பூட்டானுக்குச் சென்றிருக்கும் மகிந்த இராசபக்சே நாடு திரும்பியதும் மேலும் குறைந்தது அய்ந்து அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வளவு அதிகார பலத்தோடு ஆட்சிக்கு வந்திருக்கும் மகிந்த இராசபக்சே தனக்குள்ள அதிகார பலத்தை எதற்குப் பயன்படுத்தப் போகிறார் என்பதே இன்றைய கேள்வியாகும்.
அவரது முதல் அய்ந்து ஆண்டு ஆட்சியில் அவர் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தாலும் நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றாகக் கெட்டிருந்தது.
கொலைகள், காணாமல் போதல், கம்பம் கேட்டு வணிகர்களைக் கடத்தல், ஊழல், ஊதாரித்தனமான செலவு, 132 பேரைக் கொண்ட இராட்சத அமைச்சரவை என ஒரு காட்டாச்சியே நடைபெற்றது.
ஏப்ரில் 2004 - மார்ச்சு 2009 ஆண்டுகளுக்கு இடையில் 34 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டார்கள். இதில் தமிழர்கள் 29, சிங்களவர்கள் 3, முஸ்லிம்கள் 2 ஆவர். பல ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு ஓடித்தப்பினார்கள். இந்த ஆண்டு சனவரி மாதத்தில் பிரகீத் எக்நாலிகொட என்ற சிங்கள ஊடகவியலாளர் காணாமல் போயுள்ளார். நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள் அரசு ஏவிவிட்ட குண்டர்களால் தாக்கப்பட்டார்கள்.
நான்கு தமிழ்நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டார்கள். ஆனால் கொலைசெய்தவர்கள் யாரும் நீதிமன்றங்களில் நிறுத்தப்படவில்லை. முறையான நீதி விசாரணை நடைபெற்று குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.
கேள்வி என்னவென்றால் இந்த படுகொலைகள், சட்ட மீறல்கள் தொடருமா இல்லையா என்பதுதான். இங்கே இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். பன்னாட்டு மனிதவுரிமை அமைப்புக்கள் பலத்த கண்டனம் தெரிவித்ததை மகிந்த இராசபச்சே அரசு கண்டு கொள்ளவே இல்லை.
தமிழ்மக்களைப் பொறுத்தளவில் இந்த அரசு ஒரு அரசியல் தீர்வுத்திட்டத்தை முன்வைக்குமா அல்லது கடந்த காலங்களைப் போல அதனை இழுத்தடித்துக் கொண்டு போகுமா என்பதுதான்.
அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் இனச் சிக்கலைத் தீர்ப்பதற்கு சிறிலங்கா அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவ்வப்போது குரல் எழுப்புகின்றன. குறிப்பாக பிரித்தானியா சிறிலங்கா இப்போதுள்ள யாப்புக்குப் பதில் ஒரு புதிய யாப்பை இயற்ற வேண்டும் எனக் கேட்டுள்ளது. பிரித்தானியாவின் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபான்ட் இதில் அக்கறை காட்டி வருகிறார். ஆனால் ஆளும் தொழில் கட்சி மே 7 இல் நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில் தோல்வியைத் தழுவும் என கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. பழைமைவாதக் கட்சி பதவிக்கு வரும் வாய்ப்பு இருக்கிறது. அந்தக் கட்சி தொழில் கட்சியின் வெளியுறவுக் கொள்கையைத் தொடர்ந்து பேணுமா என்று சொல்ல முடியாது.
இனச் சிக்கலைத் தீர்த்து வைப்பதில் இந்தியாவின் பங்கு எப்படி இருக்கும் என்பது மூடு மந்திரமாகவே இருக்கிறது. இந்தியா ஒரு தீர்வுத் திட்டத்தை முன் வைத்தாலும் அது 13 ஆவது சட்ட திருத்தத்துக்கு உட்பட்டதாக இருக்குமா அல்லது அதற்கு மேலாக ஒன்றிணைந்த வட - கிழக்குக்கு இந்திய மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரம் போன்றவை கொடுக்கப்படுமா என்பது தெரியவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் அறிக்கையில் தாயகம், தேசியம், தன்னாட்சி கோட்பாடுகளின் அடிப்படையில் வடக்கும் - கிழக்கும் ஒன்றிணைந்த தமிழர்களின் பூர்வீக நிலப்பரப்பில் ஒரு இணைப்பாட்சி உருவாக்கப்பட வேண்டும் எனக் கேட்டிருந்தது.
ஆனால் மகிந்த இராசபக்சே வட - கிழக்கு இணைப்பு இல்லை என்று அடித்துச் சொல்லி வருகிறார். பூட்டானில் இருந்து நாடு திரும்பியதும் மகிந்த இராசபக்சே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பேச்சு வார்த்தைக்கு அழைக்கலாம். தேர்தலுக்கு முன்னர் வட - கிழக்கில் பெரும்பான்மை இருக்கைகளைப் பெற்று வரும் கட்சியோடு இனச் சிக்கல் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்துவேன் என மகிந்த இராசபக்சே சொன்னது நினைவு கூரத்தக்கது.
அறுபது ஆண்டு காலமாகப் புரையோடிப் போயிருக்கும் இனச் சிக்கலுக்கு விரைவில் தீர்வு கண்டு விட முடியாது. நெல்சன் மண்டேலா போன்ற அரசியல் அறிஞர்கள் (statesmen) சிறிலங்காவில் இல்லை. கடைதெடுத்த சிங்கள - பவுத்த இனவாதிகளே அங்கு இருக்கிறார்கள்.
எனவே சகல வாழ்வாதாரங்களையும் இழந்து நிற்கும் தமிழ்மக்களின் அன்றாட வாழ்க்கைச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு ஒரு இடைக்கால தீர்வுத் திட்டம் தேவைப்படுகிறது.
போரினால் பாதிக்கப்பட்டு வன்னி முகாம்களிலும் இடைத்தங்கல் முகாம்களிலும் அடைபட்டுக் கிடக்கும் எமது மக்கள் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும். அவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட வேண்டும். தொழில் வாய்ப்பு, கல்வி, அடிப்படை நல்வாழ்வு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதற்கான நிதியுதவியை இந்தியா போன்ற நாடுகளிடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும்.
தமிழத் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த முகாம்களுக்குச் நேரடியாகச் சென்று மக்களோடு பேசி அவர்களது குறைகளைக் கேட்டு அறிய வேண்டும். மறுவாழ்வு என்ற பெயரில் திறந்த வெளிச் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் விடுதலைப் போராளிகளை விடுவிக்க உருப்படியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உயர்பாதுகாப்பு வலையங்கள் நீக்கப்பட வேண்டும்.
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தடை செய்யப்பட்டுவிட்டதால் மறு வாழ்வுக்கான உதவிகள் கடந்த ஒர் ஆண்டாக நடைபெறவில்லை. எனவே தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு ஈடான ஒரு தொண்டு நிறுவனம் உருவாக்கப் படவேண்டும். அதன் கிளைகள் புலம்பெயர் நாடுகளில் நிறுவ வேண்டும். அவை மூலம் மறுவாழ்வுக்குத் தேவைப்படும் கோடிக்கணக்கான நிதியில் ஒரு சிறு பங்கினையாவது புலம்பெயர் தமிழ்மக்களிடம் திரட்ட வேண்டும்.
வரலாறு காணாத சிங்கள - பவுத்த வெறிபிடித்த அரசின் கீழ் தமிழ்மக்கள் அடக்கி ஒடுக்கி அடிமைகள் போல் நடத்தப்படுகிறார்கள். "இந்த நாடு சிங்கள நாடு, நான் சிங்களவன், நான் சொல்வதை தமிழர்களாகிய நீங்கள் கேட்க வேண்டும்" எனக் கொக்கரிக்கும் ஒருவரே நாட்டின் ஆட்சித்தலைவராக இருக்கிறார்.
தமிழ்மக்களுக்கு அவர்களது அரசியல், பொருண்மிய விடுதலையைப் பெற்றுக் கொடுக்கும் பாரிய பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது. பலத்த அழுத்தங்கள, நெருக்கடிகள், அச்சுறுத்தல்கள், ஆசை வார்த்தைகள், அற்ப சலுகைகள் போன்றவற்றின் மத்தியிலும் தமிழ்மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே ஆதரித்து நின்றார்கள் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மறந்துவிடக் கூடாது. மறக்க மாட்டார்கள் என நம்புகிறோம்.
You have everything you could ask for and more. No excuses or deferments are acceptable any longer. The war is over, there is no more non-state terrorism to contend with. Address the terrible consequences of this war immediately. Ensure that constitutional changes are made to rectify legitimate grievances and, equally importantly, ensure that the new and existing legislation is implemented properly.noon on January 30, according to his wife, Hemali Abeyratne, and staffers at the paper. Lanka e News journalist